ஆங்கிலவழிக் கல்வி (English-medium education) என்பது ஆங்கிலத்தினை பயிற்று மொழியாகக் கொண்டு மேற்கொள்ளப்படும் கற்பித்தல் முறையினைக் குறிப்பதாகும். குறிப்பாக, ஆங்கிலம் மாணவர்களின் தாய்மொழியாக இல்லாத இடங்களில் கற்பிக்கப்படுவதனைக் குறிக்கிறது.
ஆங்கிலவழிக் கல்வி என்பது பிரித்தானிய ஆட்சியின் விரிவாக்கத்துடன் தொடர்புடையது.[1][2] இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் அமெரிக்காவின் பொருளாதார வளார்ச்சியும் கலாச்சார செல்வாக்கும், இணையம் மற்றும் பிற தொழில்நுட்பங்களின் விரைவான பரவலைப் போலவே, ஆங்கில மொழியின் தாக்கத்தை உலகளவில் மேலும் அதிகரித்துள்ளது.[3][4][5] இதன் விளைவாக, ஆங்கிலம் பிரதான மொழியாக இல்லாத பல மாநிலங்களில் ஆங்கிலவழிக் கல்விப் பள்ளிகள் உள்ளன. சர்வதேசமயமாக்கலை நோக்கிய சமீபத்திய போக்கு காரணமாக, அதிக எண்ணிக்கையிலான பட்டப்படிப்புகள், குறிப்பாக முதுகலை மட்டத்தில், ஆங்கிலவழிக் கல்வி மூலம் கற்பிக்கப்படுகின்றன.[6]
18ஆம் நூற்றாண்டில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் உள்ள ஒவ்வொரு கோயில், மசூதி அல்லது கிராமத்திற்கும் ஒரு பள்ளி இருந்ததால், உள்நாட்க் கல்வி பரவலாக இருந்தது என்று பிரித்தானியப் பதிவுகள் காட்டுகின்றன.[7] கற்பிக்கப்பட்ட பாடங்களில் வாசிப்பு, எழுத்து, எண்கணிதம், இறையியல், சட்டம், வானியல், உருவகவியல், நெறிமுறைகள், மருத்துவ அறிவியல் மற்றும் மதம் ஆகியவை அடங்கும். பள்ளிகளில் சமூகத்தின் அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த மாணவர்கள் கல்வி கற்றனர்.
1813 ஆம் ஆண்டின் சாசனச் சட்டம், இந்தியக் கல்வி முறையில், தாய்மொழியுடன் ஆங்கிலமும் கற்பிக்கப்படும் என்று தீர்ப்பளித்தது.
தற்போதைய கல்வி முறை, 19 ஆம் நூற்றாண்டில் தாமஸ் பேபிங்டன் மெக்காலே பரிந்துரைகளைத் தொடர்ந்து ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு நிதியளிக்கப்பட்டது.[8] இந்தியப் பாரம்பரியக் கல்வி முறைகள் பிரித்தானிய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படவில்லை, அதன் பின்னர் அவை வீழ்ச்சியடைந்து வருகின்றன.
தாமஸ் மெக்காலேயின் பிரபலமற்ற 'ஆங்கிலக் கல்விச் சட்டம்' (1835) அத்தகைய கொள்கையின் நிரல்களை வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் உள்ளடக்கியது.[9]