கவிதா கே. பர்ஜாத்யா | |
---|---|
பிறப்பு | 12 நவம்பர் 1977 மும்பை, மகாராட்டிரம், இந்தியா |
பணி | தயாரிப்பாளர், ராஜ்சிறீ புரொடக்சன்சின் இயக்குனர் |
செயற்பாட்டுக் காலம் | 2003 முதல் தற்போதுவரை |
உறவினர்கள் | சோரஜ் பர்ஜாத்யா (உறவினர்) |
கவிதா கே. பர்ஜாத்யா (Kavita K. Barjatya) (பிறப்பு: 1977) ஒரு இந்திய தொலைக்காட்சி மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். இவர் இவரது பெற்றோரின் குடும்பத்திற்கு சொந்தமான ராஜ்சிறீ புரொடக்சன்ஸ் என்ற திரைப்பட நிறுவனத்தில் பணிபுரிகிறார்.
கவிதா பர்ஜாத்யா 1977 நவம்பர் 12 அன்று மும்பையில் பிறந்தார். ராஜ்சிறீ புரொடக்சன்ஸின் தற்போதைய நிர்வாக இயக்குநரான கமல் குமார் பர்ஜாத்யாவின் மகளும் மற்றும் 1947 இல் ராஜ்சிறீ புரொடக்சன்ஸை நிறுவிய திரைப்பட தயாரிப்பாளர் தாராசந்த் பர்ஜாத்யாவின் பேத்தியுமாவார் [1] .
கவிதா மும்பையில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார். இவர் சிடன்ஹாம் கல்லூரியில் [2] பட்டம் பெற்றார். பின்னர் என்.எம்.ஐ.எம்.எஸ் பல்கலைக்கழகத்தில் நிர்வாகத்தில் முதுகலை பட்டம் பெற்றார். இவர் ஒரு பயிற்சி பெற்ற குரல் பாடகரும் மற்றும் கதக் நடனக் கலைஞருமாவார். மேலும் பல நேரடி மேடை நிகழ்ச்சிகளையும் வழங்கியுள்ளார். இவர் பல்வேறு இசைக்கருவிகளையும் வாசிப்பார்.
கவிதா சுருக்கமான திருமண வாழ்க்கையைக் கொண்டிருந்தார். அது சுமார் 100 நாட்கள் மட்டுமே நீடித்தது. இது இவரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக இருந்தது. அதன் பின்னர் இவர் தனது வாழ்க்கையை வளர்ப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். [3]
இந்தியாவில் பொழுதுபோக்கு துறையில் இவரது வாழ்க்கை மெயின் பிரேம் கி திவானி ஹூன் என்ற இந்தித் திரைப்படத்துடன் தொடங்கியது. இப்படத்தில் இவர் தனது உறவினர் சூரஜ் ஆர். பர்ஜாத்யாவுக்கு உதவினார். [4]
2004 ஆம் ஆண்டில், சூரஜ் பர்ஜாத்யாவின் உத்தரவின் பேரில், மற்றும் அவரது வழிகாட்டுதலுடன், 1984 ஆம் ஆண்டில் ராஜ்சிறீயிலிருந்து வெளியேறி தொலைக்காட்சி வணிகத்தை இவர் புதுப்பித்தார். [5] ராஜ்சிறீயின் தொலைக்காட்சிப் பிரிவு அந்த ஆண்டு தொடங்கப்பட்டது. மேலும் கவிதா, குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து, எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக அதை வெற்றிகரமாக நிர்வகித்து வருகிறார். மேலும் வோ ரெஹ்னே வாலி மெஹ்லான் கி, யஹான் மெயின் கர் கர் கெலி, டோ ஹான்சன் கா ஜோடா போன்ற பல நிகழ்ச்சிகளையும் தயாரித்தார்.
கவிதா பர்ஜாத்யாவின் முதல் சுயாதீனமான திட்டமான தொலைக்காட்சித் தொடர் வோ ரெஹ்னே வாலி மெஹ்லான் கி என்பது , ஒரு குடும்பக் கதையாகும். இந்நிகழ்ச்சி சஹாரா ஒன் என்றத் தொலைகாட்சியில் 2005 மே 30 அன்று இரவு 9.00 மணிக்கு தொடங்கப்பட்டது [6] இந்த நிகழ்ச்சி ஆறு ஆண்டுகள் மற்றும் 1400 அத்தியாயங்களில் வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டது. [7] மேலும் பல விருதுகளையும் வென்றது.
கவிதாவின் அடுத்த தயாரிப்பு, பியார் கே டோ நாம்: ஏக் ராதா, ஏக் ஷியாம், 2006 ஏப்ரல் 3, அன்று ஸ்டார் பிளஸில் இரவு 8:00 மணிக்கு ஒளிபரப்பப்பட்டது . [8] கதை மறுபிறவி என்ற கருத்தையும், நித்திய காதல் எவ்வாறு நீடிக்கும் என்பதையும் மையமாகக் கொண்டிருந்தது. [9]
2008 சனவரியில், இவர் என்.டி.டி.வி இமேஜின் தொலைக்காட்சியில் <i>மெயின் தேரி பார்ச்செய்ன் ஹூன்</i> என்றத் தொடரைத் தொடங்கினார்; இந்த நிகழ்ச்சி 212 அத்தியாயங்களுடன் வெற்றிகரமான ஓராண்டு ஒளிபரப்பப்பட்டது. மற்றொரு நிகழ்ச்சியான, யஹான் மெயின் கர் கர் கெலி என்பது 2009 நவம்பரில் இரவு 8:30 மணிக்கு ஜீ தொலைக்காட்சியில் தொடங்கப்பட்டது. ஸ்வர்ன் பவனின் தொகுப்பு அதன் காலத்தின் மிகப்பெரிய மற்றும் மிகவும் பகட்டானது. இது ஒரு புகழ்பெற்ற 3 ஆண்டுகள் மற்றும் கிட்டத்தட்ட 700 அத்தியாயங்களை நிறைவு செய்தது. [10] அ
அடுத்ததாக இரவு 9.30 மணிக்கு என்.டி.டி.வி இமேஜினில் டூ ஹான்சன் கா ஜோடா என்றத் தொடர் வெளிவந்தது. [11] கவிதா பர்ஜாத்யா 2012 பிப்ரவரியில் சஹாரா ஒன்னில் ஜில்மில் சீதாரோன் கா ஆங்கன் ஹோகா மற்றும் 2012 சூன் 18 அன்று ஸ்டார் பிளஸில் பியார் கா டார்ட் ஹை மீதா மீதா பியாரா பியாரா ஆகிய இரண்டு நிகழ்ச்சிகளைத் தொடங்கினார்.
2013 ஆம் ஆண்டில், கவிதா பர்ஜாத்யா திரைப்படத்தில் தனது பயணத்தை சாம்ராட் & கோ என்றத் திரைப்படத்தின் தயாரிப்பாளராக தொடங்கினார் . [12] இப்படம் ஆரம்பத்தில் 2014 மே 1 அன்று வெளியிட திட்டமிடப்பட்டது. [13] ஆனால் 2014 ஏப்ரல் 25 அன்று திட்டமிடலுக்கு முன்னதாகவே வெளியிடப்பட்டது.[14][15][16][17]
கவிதா பர்ஜாத்யா இந்திய தொலைக்காட்சி அகாடமியின் நிகழ்த்து கலைப் பள்ளியின் ஆலோசனைக் குழுவிலும் இடம் பெற்றுள்ளார். [18]
{{cite web}}
: Unknown parameter |=
ignored (help)