கிசாரி மோகன் கங்குலி (Kisari Mohan Ganguli), என்ற வங்காளி அறிஞர் சமஸ்கிருத மொழியில் அமைந்த மகாபாரத இதிகாசத்தை ”தி மகாபாரதா” (The Mahabharata) எனும் பெயரில் முதன்முதலாக ஆங்கில மொழியில் மொழி பெயர்த்த இந்தியர். கிசாரிலால் மோகன் கங்குலியின் ஆங்கில மொழி பெயர்ப்பு மகாபாரத இதிகாச நூலை பொது இணையதளத்தில் படிக்கலாம்.[1]. கங்குலியின் ஆங்கில மொழி மகாபாரத நூலை முன்சிராம் மனோகர்லால் மறுபதிப்பு செய்து வெளியிட்டுள்ளார். கிசாரி மோகன் கங்குலியின் ஆங்கில மொழி மகாபாரத இதிகாசத்தை முழு மகாபாரதம் எனும் பெயரில் செ. அருட்செல்வப்பேரரசன் என்பவர் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.[2].