குருணாகல் மணிக்கூட்டுக் கோபுரம் | |
ஆள்கூறுகள் | 7°29′12.8″N 80°21′54.3″E / 7.486889°N 80.365083°E |
---|---|
இடம் | குருணாகல், இலங்கை |
கட்டுமானப் பொருள் | கருங்கல், சீமைக்காரை, மரம் |
முடிவுற்ற நாள் | 1922 |
அர்ப்பணிப்பு | இது முதல் உலகப் போரில் பங்கேற்று இறந்த வடமேற்கு மாகாணத்தைச் சேர்ந்த வீரர்களின் நினைவாக 1922 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது.[1] |
குருணாகல் கடிகார கோபுரம் (Kurunegala Clock Tower) என்பது இலங்கையின் குருணாகல் நகரத்தில் அமைந்துள்ளது. இது முதல் உலகப் போரில் பங்கேற்று இறந்த வடமேற்கு மாகாணத்தைச் சேர்ந்த வீரர்களின் நினைவாக 1922 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. [2] குருணாகல் நீதிமன்றம், மத்திய சந்தை, மத்திய பேருந்து நிலையம் ஆகியவை இக்கடிகார கோபுரத்திற்கு அருகில் உள்ளன.
முதல் உலகப் போரில் (1914-1918) வடமேற்கு மாகாணத்தைச் சேர்ந்த 11 வீரர்கள் கொல்லப்பட்டனர். இதில் மூன்று இலங்கையர்களும் அடங்குவர். அவர்களை கௌரவிப்பதற்காக இக்கோபுரம் அமைக்கப்பட்டது. கோபுரத்தின் மீது ஒரு நினைவுத் தகடு பின்வருமாறு பொறிக்கப்பட்டுள்ளது:
1945-க்குப் பிறகு, இரண்டாம் உலகப் போரில் (1939-1945) தங்கள் உயிரைத் தியாகம் செய்த வீரம் மிக்க அதிகாரிகளுக்கும் இந்தக் கோபுரம் அர்ப்பணிக்கப்பட்டது. [3]
கருங்கல், சீமைக்காரை, மரம் ஆகியவற்றைக் கொண்டு நாற்கர வடிவத்தில் இந்த கோபுரம் கட்டப்பட்டுள்ளது. முழு கோபுரமும், குறிப்பாக மேலே, ஒரு நாற்புற கோட்டைக்கு ஒத்ததாக தோன்றுகிறது. உள்ளே கான்கிரீட்டாலும், மரத்தாலும் செய்யப்பட்ட படிகள் உள்ளன. [4]
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link)
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link)