கோ. சூ. பிரகாஷ் ராவ் | |
---|---|
பிறப்பு | கோவெலமுடி சூர்ய பிரகாஷ் ராவ் 27 ஆகஸ்ட் 1904 கோலவென்னு, சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா (நவீன ஆந்திரப் பிரதேசம், இந்தியா) |
இறப்பு | 1996 (அகவை 81–82) |
பணி | இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர், ஒளிப்பதிவாளர் |
வாழ்க்கைத் துணை | ஜி. வரலட்சுமி (தி. 1943–1996) |
பிள்ளைகள் | கோவெலமுடி ராகவேந்திர ராவ் உட்பட மூவர் |
உறவினர்கள் | பிரகாஷ் கோவெலமுடி (பேரன்) கோ. பாப்பையா (மருமகன்) |
விருதுகள் | நந்தி விருது தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் |
கோவெலமுடி சூர்ய பிரகாஷ் ராவ் ( Kovelamudi Surya Prakash Rao ) (1914-1996) கே. எஸ். பிரகாஷ் ராவ் எனவும் அறியப்படும் இவர் ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும், நடிகரும் மற்றும் ஒளிப்பதிவாளரும் ஆவார். இவர் தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் இந்தி படங்களில் பணிபுரிந்தார்.[1][2][3] 1977 இல் கன்னடத்தில் சிறந்த இயக்குனருக்கான தென்னிந்திய பிலிம்பேர் விருதை கந்தா ஹெந்தி என்ற படத்துக்காக வென்றார். [4] 1995 ஆம் ஆண்டில், ராவ் தெலுங்குத் திரைப்படத்துறைக்கு இவர் செய்த பங்களிப்புகளுக்காக ரகுபதி வெங்கையா விருதைப் பெற்றார்.[1] [3] [5] இவர் பிரபல தெலுங்கு இயக்குனர் கே. ராகவேந்திர ராவின் தந்தையும் மற்றொரு பிரபல இயக்குனர் கோ. பாப்பையாவின் மாமாவும் ஆவார்.
அவன் ஒரு சரித்திரம் (1976), மறுமலர்ச்சி (1956), பெற்ற தாய் (1953) போன்ற சில தமிழ் படங்களையும் இயக்கியுள்ளார்.