சஞ்சய் சதுர்வேதி ஒரு இந்திய வனப்பணிகள் துறை (ஐஎஃப்எஸ்) அதிகாரி ஆவார். தற்போது அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் துணை செயலாளராக பணியாற்றி வருகிறார்.பொது நிறுவனங்களில் ஊழல் மற்றும் முறைகேடுகளை துணிச்சலுடன் அம்பலப்படுத்தியதற்காக 2015 இல் ரமோன் மக்சேசே விருது பெற்றவர்.[1] ஹரியானா அரசால், 5 ஆண்டுகளுக்குள் 12 முறை பணியிட மாற்றம் செய்யப்பட்டவர்.