துடுப்பாட்டத் தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மட்டையாட்ட நடை | வலது கை துடுப்பாட்டம் | |||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | சுழல் பந்துவீச்சு | |||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: [1], டிசம்பர் 8 2005 |
சஞ்சய் மஞ்ச்ரேக்கர் (Sanjay Manjrekar, संजय विजय मांजरेकर பிறப்பு: சூலை 12. 1965), இந்தியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது. அவ்வப்போது குச்சக் காப்பாளராகவும் செயல்பட்டார். இந்திய அணிக்காக இவர் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.தற்போது இவர் துடுப்பாட்ட வர்ணனையாளராக உள்ளார்.[1][2] இவர் 37 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 74 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில், இந்தியத் தேசிய அணியினை இவர் 1987–1997 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.
1987 ஆம் ஆண்டில் இந்தியத் துடுப்பாட்ட அணி மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. நவம்பர் 25, புது தில்லியில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.
1987 ஆம் ஆண்டில் இந்தியத் துடுப்பாட்ட அணி மேற்கிந்தியத் தீவுகளில்சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. நவம்பர் 25, புது தில்லியில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 25 பந்துகளில் 5 ஓட்டங்கள் எடுத்து பேட்டர்சனின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.[3] பின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் 63 பந்துகளில் 10 ஓட்டங்கள் எடுதிருந்த போது காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகினார்.இந்தப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெற்றி பெற்றது.
1996 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. நவம்பர் 20 இல், அகமதாபாத்தில் நடைபெற்ற தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் இறுதியாக விளையாடினார் இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 94 பந்துகளில் 34 ஓட்டங்கள் எடுத்து ஆதம்சின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் 20 பந்துகளில் 5 ஓட்டங்கள் எடுதிருந்த போது டொனாஅல்டின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் இந்திய அணி 64 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
1988 ஆம் ஆண்டில் நியூசிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் தனது முதல் அரை நூறினைப்பதிவு செய்து இந்திய அணி வெற்றி பெற உதவினார்.[4] பின் 1989 ஆம் ஆண்டில் மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் தனது முதல் நூறினைப் பதிவு செய்தார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 218 ஓட்டங்கள் எடுத்து ரன் அவுட் ஆனார்.[5] அதன் பின் இரண்டு ஆண்டுகளுக்கு இவரால் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இவரால் நூறு ஓட்டங்களை அடிக்க இயலவில்லை. பின் தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் 82 பந்துகளில் 105 ஓட்டங்கள் எடுத்தார்.[6]
1988 ஆம் ஆண்டில் மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. சனவரி 5 இல், ராஜ்கோட்டில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியில் 19 பந்துகளில் 19 ஓட்டங்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 6 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
1996 ஆம் ஆண்டில் டைடன் கோப்பைத்தொடரில் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார்.நவம்பர் 6 இல், மும்பையில் நடைபெற்ற தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான இறுதி ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் இறுதியாக விளையாடினார். இந்தப் போட்டியில் 31 பந்துகளில் 7 ஓட்டங்கள் எடுத்து ஏ பி டிவில்லியர்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் இந்திய அணி 35 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[7]
சஞ்சய் மஞ்ச்ரேக்கர் வர்ணனையின்போது மும்பை வீரர்களை அளவுக்கு அதிகமாகப் புகழ்வது விமர்சனத்துக்குள்ளானது. அது தவிர, ரவீந்திர ஜடேஜாவை 'பிட்ஸ் அண்ட் பீசஸ்' கிரிக்கெட் வீரர் என விமர்சித்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. பிங்க் பால் டெஸ்ட் போட்டியின்போது, சக வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளேவையும் வம்புக்கு இழுத்தார். அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கியதால், பி.சி.சி.ஐ அவரை வர்ணனையாளர்கள் பட்டியலில் இருந்து நீக்கியது. 2020 ஐபிஎல் போட்டிகளுக்கு முன்னதாக அந்த வர்ணனை குழுவில் தன்னையும் இணைக்குமாறு, பி.சி.சி.ஐ-யிடம் அவர் மன்றாடினார்.