சில்சிலா பதல்தே ரிசுதன் கா (Silsila Badalte Rishton Ka transl. மாறிவரும் உறவுகளின் வரிசை ) என்பது இந்திய காதல் நாடகத் தொடராகும், இது கலர்ஸ் தொலைக்காட்சியில் 4 ஜூன் 2018 அன்று திரையிடப்பட்டது. [1] இது ஸ்பியர் ஆரிஜின்ஸின் கீழ் சன்ஜோய் வாத்வாவால் தயாரிக்கப்பட்டது. [2] [3] இந்த நிகழ்ச்சி உறவுகளின் மாற்றம், முக்கோண காதல் மற்றும் கூடுதல் திருமண விவகாரங்கள் ஆகிய கருத்துக்களை மையமாகக் கொண்டிருந்தது [4] [5] 2018 ஆம் ஆண்டில், மவுலி, நந்தினி மற்றும் குணால் ஆகியோராக முறையே அதிதி சர்மா, திரஷ்டி டாமி மற்றும் சக்தி அரோரா நடித்து இருந்தனர். இந்தக் கதை மாந்தர்களைச் சுற்றியே கதையின் மையம் அமைக்கப்பட்டிருக்கும் [6] 2018 ஆம் ஆண்டில், நிகழ்ச்சி நவீன ஊடகத் தளமான ஊட்டில் வெளியானது . அதில் அடுத்த தலைமுறையான தேஜஸ்வி பிரகாஷ், அனேரி வஜனி மற்றும் குணால் ஜெய்சிங் ஆகியோர் நடித்த மிஷ்டி, பாரி மற்றும் ருஹான் ஆகியோரின் வாழ்க்கையினை மையமாகக் கொண்டது. [7]
முதல் பருவத்தில் மவுலி மற்றும் நந்தினி பற்றியதாக இருந்தது, அங்கு மவுலியின் கணவர், குணால் மற்றும் நந்தினி ஆகியோர் ஒருவருக்கொருவர் விரும்பினர், அதே நேரத்தில் மவுலி குனலை விவாகரத்து செய்த பிறகு இஷானுடன் வாழ்க்கை நடத்த விரும்பினார். [8] நந்தினியின் கணவர் ராஜ்தீப்பின் செயல்களாக இந்த நாடகத் தொடரில் காண்பிக்கப்படுவதன் மூலம் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறையைக் காட்டுவதில் இது கவனம் செலுத்தியது. [9] [10] முதல் பருவம் முதலில் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது, ஆனால் பின்னர் ஊட்டிற்கு மாற்றப்பட்டது. நவீன கால இளைஞர்கள், காதல் மற்றும் உறவுகளை மையமாகக் கொண்ட இரண்டாவது பருவ நாடகத் தொடர் ஊட் ஒலிக்காட்சித் தாரையில் கானும் வசதி கொண்டாதாக அமைக்கப்பட்டு இருந்தது.
மவுலியும் நந்தினியும் ஒன்றாக வளர்ந்த சிறந்த நண்பர்கள். நந்தினி மவுலியின் நட்புக்காக ராஜ்தீப் தாக்கூரை விட்டுப் பிரிந்தார். நந்தினியின் கெட்ட தன்மை குறித்து அவர் எச்சரித்த போதிலும், இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு அவர்கள் பிரிந்தனர்.
மவுலி, இப்போது ஒரு மகளிர் மருத்துவ நிபுணர் தனது கணவர், குழந்தை மருத்துவர் குணால் மல்ஹோத்ராவுடன் வசிக்கிறார்; அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் ஆதரவளிக்கிறார்கள். ராஜ்தீப்பை மணந்த நந்தினி வீட்டு வன்முறையால் பாதிக்கப்பட்டவர். ஒரு தொழிலதிபர் மற்றும் ஆதிக்கம் செலுத்தும் கணவரான, ராஜ்தீப் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல வழிகளில் அவரை பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுகிறார்.
குணால் நந்தினியை ஒரு மருத்துவ மாநாட்டில் பார்க்கிறார், அவர் மவுலியின் நண்பர் என்பதை அறிகிறார். அவர் மவுலியிடம் இது பற்றி பேசுகிறார். அவள் 7 வருடங்களுக்கு பிறகு நந்தினியை சந்திக்கிறாள். நந்தினி மவுலிக்கு தான் கர்ப்பமாக இருப்பதை வெளிப்படுத்துகிறாள். நந்தினியின் கர்ப்பத்தைப் பற்றி கேள்விப்பட்ட ராஜ்தீப் அவரை அடித்து சாலையில் விட்டு விடுகிறார். குணால் அவரைக் கண்டுபிடித்து அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். நந்தினிக்கு கருச்சிதைவு எற்படுகிறது.
மவுலியால் சமாதானப்படுத்தப்பட்ட அவர், குடும்ப வன்முறை குற்றத்தில் ராஜ்தீப்பை கைது செய்து குணாலின் வீட்டில் வாழத் தொடங்கினார். அவந் அந்தப் பெண்னால் ஈர்க்கப்படுகிறார். அவரால் மவுலியினைப் பற்றிய எண்ணம் தோன்றினாலும் நந்தினியைப் பற்றி நினைப்பதை நிறுத்த முடியவில்லை. மெதுவாக, அவளும் குணாலினால் ஈர்க்கப்படுகிறார். அவனிடம் அவளது காதல் உணர்வுகளைக் கட்டுப்படுத்த இயலாமையால் ஊரை விட்டு வெளியேற முடிவு செய்தாள்.