சுனில் தியோதர் (Sunil Deodhar) இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். மராத்தி மொழி பத்திரிகையாளர் வி நா தியோதரின் மகனான சுனில்[1] 1965 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளரான இவர் ஆர்.எசு.எசு. அமைப்பின் பிரச்சாரகராகவும் உள்ளார். 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது வாரணாசி தொகுதியில் நரேந்திர மோடியின் பிரச்சார மேலாளராகவும் பணிபுரிந்தார். வட-கிழக்கு இந்தியாவின் என் வீடு இந்தியா என்ற இலாப நோக்கற்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சுனில் தியோதர் நிறுவினார்.[2][3][4][5]