सेवा भारती | |
உருவாக்கம் | 1979 |
---|---|
நிறுவனர் | மதுகர் தத்தாத்திரேய தேவ்ரஸ் |
வகை | சமுதாயச் சேவை |
தலைமையகம் | |
சேவைப் பகுதி | உடல் நலம், கல்வி |
தாய் அமைப்பு | ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம் |
சார்புகள் | சங்கப் பரிவார் |
வலைத்தளம் | https://www.sevabharathi.in/?about_us |
சேவா பாரதி (Seva Bharati) (இந்தி: सेवा भारती) எனும் தொண்டு நிறுவனம் பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்கள் மற்றும் பழங்குடி மக்கள் மற்றும் உள்ளூர் மக்களின் உடல் நலம் மற்றும் கல்வி குறித்து செயல்படும் அமைப்பாகும்.[1] சேவா பாரதி தொண்டு நிறுவனத்தை 8 ஏப்டல் 1979 அன்று தில்லி அம்பேத்கார் அரங்கக் கூட்டத்தில், தொண்டர்களிடையே பேசும் போது துவக்கி வைத்தவர் சமூக ஆர்வலர் மதுகர் தத்தாத்திரேய தேவ்ரஸ் ஆவார். சேவா பாரதி நிறுவனத்தை சமூக-கலாச்சார தொண்டு நிறுவனமாக 2011-ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டது. 2017-ஆம் ஆண்டு முதல் இந்த அமைப்பின் தலைவராக பரக் அபயகார் உள்ளார்.
மேலும் இந்த அமைப்பு நகர்புறத்தில் உள்ள குடிசைப்பகுதி மக்களுக்கு மருத்துவ உதவிகள், இலவசக் கல்வி மற்றும் தொழில் பயிற்சிகள் வழங்குகிறது.[2]. பன்னாட்டு அளவிலும், இந்திய அளவிலும் சேவா பாரதி அமைப்பு பல சிறப்பு விருதுகளை பெற்றுள்ளது. இதன் தாய் அமைப்பு ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம் ஆகும். இது சங்கப் பரிவாருடன் இணைப்பு பெற்றுள்ளது..[3][4]
சேவா பாரதியும், அதன் சகோதரி அமைப்புகளும் இணைந்து இராஷ்டிர சேவாபாரதி எனும் பெயரில் ஒரு குடையின் கீழ் இணைந்து நின்று, நாடு முழுவதும் பல்வேறு சேவை நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், பெரிய அளவிலான பேரிடர் காலத்தின் போது, எளிய மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகளையும் சேவாபாரதி வழங்குகிறது. சென்னை மற்றும் கேரளா மழை வெள்ளத்தின் போது அதன் பணி சர்வதேச பாராட்டைப் பெற்றது. கொரோனாவின் தற்போதைய நெருக்கடியில், சேவாபாரதி அதன் கொடுமையை தணிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
2001 குஜராத் நிலநடுக்கம், 2004 சுனாமி, 2016 வட இந்தியப் பெருவெள்ளம் மற்றும் 2018 கேரள வெள்ளத்தின் போது சேவா பாரதி தொண்டர்கள் நிவாரணப் பணிகள் மேற்கொண்டனர்.[5][6] தீவிரவாத தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற குழந்தைகளை, சேவா பாரதி மறுவாழ்வு இல்லங்களில் வளர்த்தெடுத்தது.[7][8] சேவா பாரதி தொண்டு நிறுவ்னம் இதுவரை கல்வி அளிப்பதில் 17,500 திட்டங்களையும், உடல் நலத்திற்கு 12,000 திட்டங்களையும் மேற்கொண்டுள்ளது.[9] பொருளாதாரத்தில் நசிந்த மக்கள் மற்றும் சமுதாயத்தால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சேவா பாரதியின் மருந்துவ உதவி, குழந்தை காப்பகம், நூலகம், முதியோர் கல்வி, தொழில் மற்றும் தொழில் பயிற்சி, தெருவில் சுற்றும் குழந்தைகளின் மேம்பாடு மற்றும் தொழுநோயாளர்களுக்கு சேவா பாரதியின் நலத்திட்டங்கள் பெரிதும் உதவுகிறது.[10] இந்தத் திட்டங்களின் மூலம் சமூகத்தின் பின்தங்கிய பிரிவினரை அவர்களின் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் சுயசார்பு கொண்டவர்களாக மாற்றுவதை சேவாபாரதி நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தியா முழுவதும் சேவா பாரதியின் 5,000 இலவச மருத்துவ நல மையங்கள் செயல்படுகிறது. அதில் 4,200 மையங்கள் கிராமப்புறங்களிலும், மலைவாழ் மக்கள் வாழும் இடங்களில் செயல்படுகிறது. மேலும் 480 நிலையான மருத்துவ மனைகள் மற்றும் 960 நடமாடும் மருத்துவ மனைகள், 6,500 ஆம்புலன்ஸ் வண்டிகள், 7 தொழுநோய் மருத்துவமனைகள் மற்றும் மறுவாழ்வு மையங்கள் செயல்படுகிறது. சேவா பாரதி 450 இரத்த சேமிப்பு வங்கிகள் கொண்டுள்ளது.[7][11] ".[12][7] குடிசைப் பகுதிகளில் இலவச மருத்துவ முகாம்களை நடத்துகிறது.[13][14][15][16][17]
கோவிட் பெருந்தொற்றின் போது சேவா பாரதி மற்றும் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் தொண்டர்கள் விழிப்புணர்வு முகாம்களை நடத்தினர்.[18]
மாற்றுத் திறன் படைத்த குழந்தைகள், முதியோர் மற்றும் சிறப்புக் குழந்தைகளுக்கான மறுவாழ்வு மையம், மனமகிழ் மன்றங்களை சேவா பாரதி அமைப்பு இந்தியா முழுவதும் 179 மையங்களில் நடத்துகிறது.[19]
பொருளாதாரத்தின் நலிவுற்றவர்கள், மலைவாழ் பழங்குடி மக்கள், கிராமபுற ஏழை மாணவர்கள் தங்கிப் படிக்க மற்றும் உணவு அருந்த சேவா பாரதி அமைப்பு விடுதிகள் கட்டியுள்ளது.[20]
மாத்திரி சாயா எனும் பெயரில் சேவா பாரதி அமைப்பு ஆதரவற்றவற்ற குழந்தைகளுக்கான நிவாரண மையங்கள் நடத்துகிறது. இம்மையத்தின் குழந்தைகள் சொந்தமாக தொழில் செய்து சம்பாதிக்கும் வகையில் மேனிலைப் பள்ளிக்கல்வி மற்றும் தொழிற்கல்வி மற்றும் பயிற்சி வசதிகள் செய்து தருகிறது.[21]
{{cite web}}
: Check date values in: |access-date=
and |archive-date=
(help)