ஜீவன் பிரமான் | |
---|---|
நாடு | இந்தியா |
பிரதமர் | நரேந்திர மோதி |
துவங்கியது | 10 நவம்பர் 2014 |
ஜீவன் பிரமான் (Jeevan Pramaan) என்பது இந்தியாவில் ஆதார் மூலம் வழங்கப்படும் ஒரு எண்ணிம வாழ்வுரிமை சான்றிதழ் ஆகும் .இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியால் நாட்டு மக்களுக்கு 2014 நவம்பர் 10 அன்று இந்தச் சேவை தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் சுமார் ஒரு கோடி ஓய்வூதியதாரர்கள் பயன் பெறுகிறார்கள். டிஜிட்டல் வாழ்வுரிமை சான்றிதழ் சமர்ப்பிப்பது மூலம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் நேரில் வந்து சமர்ப்பிக்க வேண்டிய வாழ்வுரிமை சான்று எண்ணிம மயமாக்கப்பட்டு உள்ளது .இந்த சேவையைப் பெற அருகில் உள்ள பொதுசேவை மையங்களை அணுகிப் பெறக்கூடியதாக உள்ளது.[1] மேலும் பல தகவல்கள் மற்றும் சேவை குறித்த அரசாணைகள் இந்த இணையதளத்தில் கொடுக்கப்பட்டு உள்ளது.[2]