தேசிய நெடுஞ்சாலை 71 | ||||
---|---|---|---|---|
ஏழு மலைகள் திருப்பதி அருகில் | ||||
வழித்தட தகவல்கள் | ||||
AH20 இன் பகுதி | ||||
நீளம்: | 190.6 km (118.4 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
மேற்கு முடிவு: | மதனப்பள்ளி | |||
கிழக்கு முடிவு: | நாயுடுபேட்டை | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | ஆந்திரப்பிரதேசம் | |||
முதன்மை இலக்குகள்: | மதனப்பள்ளி, பீலேர், திருப்பதி, ரேணிகுண்டா | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 71 (National Highway 71 (India)(முன்பு தேசிய நெடுஞ்சாலை 205 ) என்பது இந்தியாவின் ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது முற்றிலும் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் செல்கிறது. இந்த நெடுஞ்சாலை கோயில் நகரமான திருப்பதி வழியாகச் சென்று கடலோர ஆந்திரப் பிரதேசத்துடன் இணைகிறது. மேற்கு முனையம் மதனப்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலை 42 சந்திப்பில் தொடங்கி கிழக்கில் நாயுடுபேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலை 16 சந்திப்பில் முடிவடைகிறது.[1][2][3]
தேசிய நெடுஞ்சாலை 71 மதனப்பள்ளியில் தொடங்கி வயல்பாட், கலிகிரி, பீலேர், திருப்பதி, ரேணிகுண்டா மற்றும் ஏர்ப்பேடு வழியாக நாயுடுபேட்டா சாலையில்முடிவடைகிறது. இது 190.6 km (118.4 mi) நீளமுடைய தேசிய நெடுஞ்சாலையாகும்.[2][4]