இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பவாய் | |
— புறநகர் — | |
அமைவிடம் | 19°07′N 72°55′E / 19.12°N 72.91°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரம் |
மாவட்டம் | மும்பை புறநகர் |
ஆளுநர் | ரமேஷ் பைஸ் |
முதலமைச்சர் | ஏக்நாத் சிண்டே |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
• 50 மீட்டர்கள் (160 அடி) |
பவாய் என்ற பெயர் பவாய் ஏரிக்கரையில் அமைந்திருக்கும் இந்து பத்மாவதி அம்மன் கோவிலை ஒட்டி, உள்ளூர் மொழி மராத்தியில் பத்மா ஆய், பத்மா அன்னை என பொருள்படும் சொல்லில் இருந்து இது எழுந்தது.
இந்தப் புறநகர் பெரும் இரநந்தானி கார்டன்சு பூங்காக்களும் புதிய கட்டிடத்தொகுதிகளும் இருப்பிடங்களும் அமைந்து அதிநவீன குடிப்பகுதியாக விளங்குகிறது.
பல்வேறு இனங்கள் மற்றும் நாட்டினரின் வசிப்பிடமாக ஓர் உண்மையான உலகப்பொது குடியிருப்பாக விளங்குகிறது.
பவய் ஏரி தவிர, இங்குள்ள சில முதன்மையான மும்பை அடையாளங்கள்:
பவாயில் அய்யப்பன் கோவில்,சுவாமி நாராயண் கோவில்,பஞ்ச் குதிர் கோவில்,சீக்கிய குருத்வாரா,இரு மாதாக்கோவில்கள் மற்றும் ஓர் மசூதி உள்ளன.
பவாய் பகுதி கடந்த பத்தாண்டுகளில் பெரிதும் வளர்ந்து மும்பையின் கிழக்கு புறநகர் பகுதிகளுக்கு குடியிருப்பு,வணிக மற்றும் சிறுவணிக மையமாக விளங்குகிறது.இங்கு நிலவும் சாலை போக்குவரத்து ஊர்தல்கள் அண்மைக்கால செய்திகளில் அதிகம் அடிபடும் நிகழ்வாகும்.
உள்ளூர் செய்தியிதழ் பிளானெட் பவாய் அண்மைய செய்திகளையும் மேம்பாடுகளையும் வெளியிடுகிறது.
சோகேசுவரி-விக்ரோலி இணைப்பு(JVL) சாலையின் பகுதி இப்புறநகர் வழியே செல்கையில் 'ஆதி சங்கராச்சார்யா மார்க்' என வழங்கப்படுகிறது.
பவாயில் உள்ள இரநந்தானி கார்டன்சு பகுதி பல பாலிவுட் படங்களில் இடம் பெற்றுள்ளது.