பாலியல் வன்முறைக்கான காரணங்களை (Causes of sexual violence) விளக்கும் பல கோட்பாடுகள் உள்ளன. இராணுவ வெற்றி, சமூகப் பொருளியல், கோபம், சக்தி, தாக்கின்பம், பண்புக்கூறுகள், நன்னெறி, சட்டங்கள், மற்றும் பரிணாம அழுத்தங்கள் , வன்கலவி, பருவ, பாலியல் துன்புறுத்தல், பின்தொடர்தல், ஆகியன இதில் உள்ளடங்கும்[1] ) பாலியல் வன்முறைக்கான காரணங்கள் பற்றிய பெரும்பாலான ஆராய்ச்சிகள் ஆண் குற்றவாளிகள் மீது மட்டுமே செய்யப்பட்டன .மேலும்,போதிய தரவு இல்லாததால் பெண் பாலியல் வன்முறையை பெரிதும் பல ஆய்வுகள் புறக்கணித்துள்ளது அதனால் அந்த ஆய்வுகள் பல விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. [2]
மருத்துவ உளவியலாளர் [3] நிக்கோலஸ் க்ரோத் பல்வேறு வகையான வன்கலவிகளை விவரித்துள்ளார். [4] ஒரு விரிவான கருத்தியல் பகுப்பாய்வு,பாலியல் மறுப்பு வன்கலவிக்கு வழிவகுக்கிறது எனக் கூறியுள்ளது. [5]
இந்த வல்லுறவாளரின் குறிக்கோள், பாதிக்கப்பட்டவரை அவமானப்படுத்துவது, அவரது மதிப்பினைக் குறைப்பது மற்றும் காயப்படுத்துவது ஆகும். உடல்ரீதியான வன்முறை மற்றும் அவதூறான மொழி மூலம் அவர்கள் பாதிக்கப்பட்டவருக்கு தங்களின் அவமதிப்பை உணர்வை வெளிப்படுத்துகிறார்கள். பாலியல் வல்லுறவு செய்பவர்களுக்கு, பாலியல் என்பது பாதிக்கப்பட்டவரைத் தீட்டுப்படுத்தவும், தரம் தாழ்த்தவும் ஒரு ஆயுதமாகும். வன்கலவி என்பது அவர்களின் கோபத்தின் இறுதி வெளிப்பாடாகும். வல்லுறவாளர்கள், பாதிக்கப்பட்டவருக்கு எதிராக அவர்கள் செய்யக்கூடிய அதிகபட்ச குற்றமாக வன்கலவி உள்ளது எனக் கருதுகிறார்கள்.
கோப வன்கலவி உடல் கொடூரத்தால் வகைப்படுத்தப்படுகிறது. இந்த வகை குற்றவாளி பாதிக்கப்பட்டவரைப் பிடித்து, தாக்கி, தரையில் தட்டி, அடித்து, ஆடைகளைக் கிழித்து, பாலியல் வல்லுறவு செய்வதன் மூலம் பாதிக்கப்பட்டவரைத் தாக்குகிறார்.
இந்த வல்லுறவாளர்களுக்கு, வன்கலவி அவர்களின் அடிப்படை உணர்வின்மைக்கு ஈடுசெய்யும் ஒரு வழியாக மாறி, அவர்களின் தேர்ச்சி, கட்டுப்பாடு, ஆதிக்கம், வலிமை, மிரட்டல், அதிகாரம் மற்றும் மனித மூலதனம் ஆகியவற்றிற்கு ஊட்டம் அளிப்பதனைக் குறிக்கிறது. இவ்வகை வல்லுறவாளர்களின் நோக்கம் அவர்களின் திறமையை உறுதிப்படுத்துவதாகும்.இவ்வகை வல்லுறவாளர்கள், வாய்மொழி அச்சுறுத்தல்கள், ஆயுதத்தால் மிரட்டல் ஆகியவற்றை நம்பியுள்ளார், மேலும் பாதிக்கப்பட்டவரை அடக்க தேவையான சக்தியை மட்டுமே பயன்படுத்துகிறார்.
சக்து வல்லுறவாளருக்கு பாலியல் வெற்றிகள் மற்றும் கற்பழிப்பு பற்றிய கற்பனைகள் உள்ளன. ஆரம்பத்தில் பாதிக்கப்பட்டவர் தங்களை எதிர்த்தாலும், அவர்கள் பாதிக்கப்பட்டவரை வென்றுவிட்டால், பாதிக்கப்பட்டவர் வல்லுறவினை அனுபவிப்பார் என்று அவர்கள் நம்பலாம். பாதிக்கப்பட்டவர் தங்களுக்கு நேர்ந்ததை அனுபவித்ததாக பாலியல் வல்லுநர் நம்புகிறார், மேலும் பாதிக்கப்பட்டவரை பின்னர் தன்னை சந்திக்க வேண்டும் என கேட்கவும் வாய்ப்புள்ளது.
பாலியல் வல்லுறவு செய்பவர் மற்றொரு பாதிக்கப்பட்டவரை கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைக்கிறார்.
எனவே, அவர்களின் குற்றங்கள் மீண்டும் மீண்டும் மற்றும் கட்டாயமாக மாறக்கூடும். அவர்கள் குறுகிய காலத்தில் தொடர்ச்சியான வல்லுறவுகளைச் செய்யலாம். [6]
இந்த வல்லுறவாளர்கள், கோபத்துடனும் சக்தியுடனும் பாலியல் வல்லுறவில் ஈடுபடுவர், இதனால் ஆக்கிரமிப்பு மற்றும் வலியின் தாக்கம் இவர்களுக்கு சிற்றின்பம் தரவல்ல செயல்களாகும். இந்த கற்பழிப்பாளருக்கு, பாலியல் உற்சாகம் அவர்களின் பாதிக்கப்பட்டவருக்கு வலியை ஏற்படுத்துவதோடு தொடர்புடையது. குற்றவாளி ,பாதிக்கப்பட்டவரை வேண்டுமென்றே துன்புறுத்துவது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது மற்றும் பாதிக்கப்பட்டவரின் வேதனை, வலி, வேதனை, துயரம், உதவியற்ற தன்மை மற்றும் துன்பம் ஆகியன இந்த வகையான வல்லுறவாளார்களுக்கு மகிழ்ச்சி தருகிறது.[7]