பிரஜாபுலி | |
---|---|
ব্রজবুলি | |
உருவாக்கப்பட்டது | வித்யாபதி |
நாள் | 16ஆம் நூற்றாண்டு |
Extinct | தெரியவில்லை |
நோக்கம் | |
வங்காளம், திர்குதா | |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-3 | None (mis ) |
மொழிக் குறிப்பு | ஒருவருமில்லை[1] |
பிரஜாபுலி (Brajabuli) என்பது மைதிலி கவிஞரான வித்யாபதியால் பிரபலப்படுத்தப்பட்ட ஒரு செயற்கை இலக்கிய மொழியாகும்.[2][3] இராதா கிருஷ்ணர் மீதான காதலைப் பற்றிய இவரது பிரஜாபுலி பாடல் வரிகள் சிறந்த படைப்புகளாகக் கருதப்படுகின்றன.[4] மற்ற கவிஞர்களும் இவரது எழுத்தைப் பின்பற்றினர். மேலும் இந்த மொழி 16ஆம் நூற்றாண்டில் நிலைநாட்டப்பட்டது.[2][3] பிரஜாபுலியில் எழுதிய இடைக்கால வங்கமொழிக் கவிஞர்களில் நரோத்தமா தாசா, பலராம தாசு, ஞானதாசு, கோபிந்ததாசு கபிராஜ் ஆகியோர் அடங்குவர்.[5]
இரவீந்திரநாத் தாகூர் தனது பானுசிம்ம தாகுரேர் படாவளி (1884) என்ற பாடலையும் இந்த மொழியில் இயற்றினார் (ஆரம்பத்தில் இந்தப் பாடல் வரிகளைப் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட கவிஞர் பானுசிங்காவின் பாடல்களாக விளம்பரப்படுத்தினார்).[4] வங்காள மறுமலர்ச்சியின் 19ஆம் நூற்றாண்டின் பிற நபர்களான பங்கிம் சந்திர சட்டர்ஜி போன்றவர்களும் பிரஜாபுலியில் எழுதியுள்ளனர்.[5] தற்போதுள்ள பிரஜாபுலி இலக்கியம் சுமார் 5,000 கவிதைகளைக் கொண்டுள்ளது.[6]
பிரஜாபுலி அடிப்படையில் மைதிலி (இடைக்காலக் காலத்தில் பரவலாக இருந்தது போல) போன்றது, ஆனால் அதன் வடிவங்கள் வங்காள மொழி போலத் தோற்றமளிக்க மாற்றியமைக்கப்பட்டுள்ளன.[2]
"During the sixteenth century, a form of an artificial literary language became established ... It was the Brajabulī dialect ... Brajabulī is practically the Maithilī speech as current in Mithilā, modified in its forms to look like Bengali".