புளியந்தோப்பு, சென்னை

புளியந்தோப்பு, சென்னை
Pulianthope
புளியந்தோப்பு
புளியந்தோப்பு, சென்னை Pulianthope is located in சென்னை
புளியந்தோப்பு, சென்னை Pulianthope
புளியந்தோப்பு, சென்னை
Pulianthope
புளியந்தோப்பு (சென்னை)
ஆள்கூறுகள்: 13°05′53″N 80°16′06″E / 13.098160°N 80.268320°E / 13.098160; 80.268320
நாடு இந்தியா
மாநிலம்=Tamil Naduதமிழ்நாடு
மாவட்டம்சென்னை மாவட்டம்
ஏற்றம்
30 m (100 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
600012
தொலைபேசி குறியீடு044xxxxxxxx
அருகிலுள்ள ஊர்கள்பெரம்பூர், அயனாவரம், ஓட்டேரி, பட்டாளம், வியாசர்பாடி மற்றும் புரசைவாக்கம்
மாநகராட்சிபெருநகர சென்னை மாநகராட்சி
மாவட்ட ஆட்சித் தலைவர்சு. அமிர்த ஜோதி, இ. ஆ. ப.
மக்களவைத் தொகுதிவடசென்னை
சட்டமன்றத் தொகுதிபெரம்பூர் (சட்டமன்றத் தொகுதி)
மக்களவை உறுப்பினர்கலாநிதி வீராசாமி
சட்டமன்ற உறுப்பினர்ஆர். டி. சேகர்
இணையதளம்https://chennaicorporation.gov.in

புளியந்தோப்பு (ஆங்கிலம்: Pulianthope) என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1][2][3][4]

கடல் மட்டத்திலிருந்து சுமார் 30 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள புளியந்தோப்பு பகுதியின் புவியியல் ஆள்கூறுகள், 13°05′53″N 80°16′06″E / 13.098160°N 80.268320°E / 13.098160; 80.268320 ஆகும். பெரம்பூர், அயனாவரம், ஓட்டேரி, பட்டாளம், வியாசர்பாடி மற்றும் புரசைவாக்கம் ஆகியவை புளியந்தோப்பு பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய புறநகர்ப் பகுதிகளாகும்.

புளியந்தோப்பு பகுதியில் நூறு ஆண்டுகளுக்கும் முந்தைய ஆடுதொட்டி (ஆடுகள், மாடுகள் அறுக்கும் கூடம்) ஒன்று உள்ளது. வார நாட்களில் சுமார் 2,500 ஆடுகளும், சுமார் 300 மாடுகளும், ஞாயிற்றுக்கிழமைகளில் சுமார் 9,000 ஆடுகளும், 1,000 மாடுகளும் இறைச்சிக்காக இங்கு அறுக்கப்பட்டு, விற்பனை நிலையங்கள், உணவுக் கூடங்கள் ஆகியவற்றிற்கு அனுப்பப்படுகின்றன.[5]

புளியந்தோப்பு பகுதியானது, பெரம்பூர் (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். இதன் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக 2021 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றவர் ஆர். டி. சேகர் ஆவார். மேலும் இப்பகுதி, வட சென்னை மக்களவைத் தொகுதி சார்ந்தது. இதன் மக்களவைத் தொகுதி உறுப்பினராக கலாநிதி வீராசாமி, 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Savitha Ganesh (2022-08-09). "Stigma around Pulianthope: How does a neighbourhood become criminalised?". Citizen Matters, Chennai (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Retrieved 2023-03-02.
  2. S. Muthiah (2008). Madras, Chennai: A 400-year Record of the First City of Modern India (in ஆங்கிலம்). Palaniappa Brothers. ISBN 978-81-8379-468-8.
  3. Goel, S. L.; Kumar, Ram (2004). Administration and Management of NGOs: Text and Case Studies (in ஆங்கிலம்). Deep & Deep Publications. ISBN 978-81-7629-570-3.
  4. Ramaswamy, L. Muthuraman, S. (2019-06-04). SOLID WASTE MANAGEMENT (in ஆங்கிலம்). MJP Publisher.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)
  5. "ஆடுதொட்டி சுகாதார சீர்கேட்டை கண்டித்து...சென்னையில் இறைச்சிகளுக்கு தட்டுப்பாடு - Dinamalar Tamil News". Dinamalar. 2010-05-25. Retrieved 2023-03-02.

வெளி இணைப்பு

[தொகு]