மார்கரெட் பார்பலேட்டு Margaret Barbalet | |
---|---|
பிறப்பு | மார்கரெட்டு ஈவ்லின் ஆர்டி 1949 (அகவை 75–76) அடிலெயிட், தெற்கு ஆத்திரேலியா |
தொழில் | நாவலாசிரியர், வரலாற்றாளர் |
கல்வி நிலையம் | அடிலெயிட் பல்கலைக்கழகம் |
இணையதளம் | |
www |
மார்கரெட் ஈவ்லின் பார்பலேட்டு (Margaret Evelyn Barbalet; பிறப்பு: 1949) ஆத்திரேலிய நாவலாசிரியரும், வரலாற்றாளரும் ஆவார்.
தெற்கு ஆத்திரேலியாவின் அடிலெய்டு நகரில் பிறந்த பார்பலேட்டு தாசுமேனியாவில் வளர்ந்தார். 1973 ஆம் ஆண்டு அடிலெய்டு பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் முதுகலை பட்டப்படிப்பை முடித்தார் [1]
அடிலெய்டு குழந்தைகள் மருத்துவமனையின் நூற்றாண்டு விழாவை கொண்டாடுவதற்காக அம்மருவத்துமனையின் வரலாற்றை எழுத இவர் பணிக்கப்பட்டார். இந்த புத்தகம் 1975 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இயெஃப்ரி தட்டனால் [2] வெளியிடப்பட்டது. ஃபார் ஃப்ரம் எ லோ கட்டர் கேர்ள் என்பது இவரது இரண்டாவது புத்தகமாகும். அமைப்பில் நிவர்த்திக்கப்பட வேண்டிய குறைகள் பற்றி முன்னாள் மாநில மாணவர்களின் கடிதங்களை அடிப்படையாகக் கொண்டு இந்நாவலை எழுதினார். [3]
பார்பலெட்டு பின்னர் புனைகதைக்குத் திரும்பினார். நாவல்கள் மற்றும் சிறுவர் புத்தகங்கள் சிறுகதைகளுடன் பிரசுரிக்கப்பட்டன. அவற்றில் மூன்று கான்பெரா நகரத்துக் கட்டுக் கதைகளாகும்: இக்கதைகள் 1988 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டன. [4]