தனிப்பட்ட தகவல்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | முகம்மது ஆசிப் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உயரம் | 1.86 m (6 அடி 1 அங்) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | இடதுகை | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலதுகை வேகப்பந்து வீச்சு | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | பந்து வீச்சு | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக்இன்ஃபோ, ஆகத்து 21 2010 |
முகம்மது ஆசிப் (Mohammad Asif, பிறப்பு: திசம்பர் 20, 1982),[1] ஒரு பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 2005 இலிருந்து பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி வருகின்றார்.[1]
ஆசிப் செய்குபுராவில் உள்ள குரா எனும் பண்ணையார் குடும்பத்தினைச் சேர்ந்தவர் ஆவார். மேலும் இவர் கான் ரிசர்ச் லேப்ஸ் , தெ நேஷனல்பேங்க், குவெத்தா செய்குபுரா, சியல்கோட் மற்றும் லீசெஸ்டெர்ஷயர் அணிகள் சார்பாக இவர் முதல்தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி வருகிறார். 2005 சனவரியில் இவர் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானர். 2010 ஆம் ஆண்டில் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் ட தேர்வுத் துடுப்பாட்பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இரன்டாவது இடம் பெற்றார்.முதல் இடத்தில் தென்னாப்பிரிக்காவின் டேல் ஸ்டெயின் இருந்தார்.[2]
2006 ஆம் ஆண்டில் ஊக்க மருந்து சர்ச்சையி சிக்கினார். அதனால் அவர் உலகக் கோப்பைத் தொடர் அணியில் இருந்து நீக்க்கப்பட்டார். 2010 ஆம் ஆண்டில் நோ பால் வீசுவதற்காக பணம் பெற்றதாக நியூஸ் ஆஃப் வேர்ல்டு தெரிவித்தது.[3] 2011 ஆம் ஆண்டில் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையாயானது இவருக்கு ஏழு ஆண்டுகள் விளையாடத் தடை விதித்தது. நவமபர் 3, 2011 இல் சூதாட்டப் புகாரில் சிக்கியதற்காக ஓராண்டு தடை பெற்றார்.
2015 ஆம் ஆண்டில் ஆகஸ்ட் 19 இல் இவர் மீதான தடையினை பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை நீக்கம் செய்தது. மேலும் இவர் அனைத்து வடிவ சர்வதேச போட்டிகளிலும் விளையாட அனுமதி வழங்கியது. அவரின் தடைக்குப்பிறகு 2016-17ஆம் ஆண்டில் நடைபெற்ற குவைத் -இ- அசாம் கோப்பைக்கான தொடரில் இவர் விளையாடினார். அந்தப் போட்டியில் இவர் நீர் மற்றும் ஆற்றல் மேலாண்மை நிர்வாகம் அணி சார்பாக விளையாடினார்.[4]
2005 ஆம் ஆண்டில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணி ஆத்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது .சனவரி 2 இல் சிட்னியில் நடைபெற்ற ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான மூன்றாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்ட்டியில் இவர் அறிமுகமானார்.[1]
இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் பந்துவீச்சில் 16 ஓவர்கள் வீசி 72 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார்.இதில் இலக்குகளைக் கைப்பற்றவில்லை. இதில் 3 ஓவர்களை மெய்டனாக வீசினார். 24 பந்துகளை சந்தித்த இவர் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். பின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் பந்துவீச்சில் 2 ஓவர்கள் வீசி 16 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார். ஆனால் இலக்கினைக் கைப்பற்றவில்லை.பின் 87 பந்துகளில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 12* ஓட்டங்கள் எடுத்தார்.இந்தப் போட்டியில் ஆத்திரேலிய அணி 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[5]
2010 ஆம் ஆண்டில் இந்தியத் துடுப்பாட்ட அணி பாக்கித்தானில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. இதன் இரண்டாவது போட்டியில் 34 ஓவர்கள் பந்துவீசி யுவராஜ் சிங்கின் இலக்கினை வீழ்த்தினார். பின் மூன்றாவது போட்டியில் 78 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து ராகுல் திராவிட் உட்பட 4 இலக்குகளைக் கைப்பற்றினார். பின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் வீரேந்தர் சேவாக், லட்சுமணன், சச்சின் டெண்டுல்கர் ஆகியோரின் இலக்கினைக் கைப்பற்றினார்.[6] இந்தத் தொடரை பாக்கித்தான் அணி வென்றது. இதன் பின் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத் தொடரை இந்திய அணி வென்றது.
இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக சிறப்பான திறனை வெளிப்படுத்தியதனால் இவர் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் இவர் தேர்வானார் இவர் 70 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 11 இலக்குகளைக் கைப்பற்றினார். இதுவே இவரின் சிறந்த பதுவீச்சு ஆகும்.
2004 ஆம் ஆண்டு இவர் லீசெஸ்டர்சயர் அணியில் ஒப்பந்தமானார். அதிக வேகத்தோடு இவர் பந்து வீசும் சிறந்த பந்து வீச்சாளர் என இவரை அந்த அணியின் நிர்வாக செயலாளர் பாராட்டினார்.[7] ஏழு முதல்தரத் துடுப்பாட்டப் போடிகளில் விளையாடிய இவர் 25 இலக்குகளைக்கைப்பற்றினார். அதன் பிறகு பாக்கித்தான் துடுப்பாட்ட அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடும் பாக்கித்தான் அணியில் இவர் தேர்வானார். மீண்டும் 2007 ஆம் ஆண்டில் லீசெஸ்டர்சயர் அணி சார்பாக தேர்வானார். ஆனால் காயம் காரணமாக இவர் விளையாடவில்லை. [8]
2010 ஆம் ஆண்டில் பாக்கித்தான் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியது. இதன் நான்காவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் ஆகஸ்டு 26, இலண்டனில் நடைபெற்றது [1].இந்தப் போட்டியில் 5 பந்துகளில் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் சுவானின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.பின் பந்துவீச்சில் 29 ஓவர்கள் வீசி 97 ஓட்டங்கள் எடுத்தார். இதில் 6 ஓவர்களை மெய்டனாக வீசினார். 1 இலக்கினைக் கைப்பற்றினார். இரண்டாவது ஆட்டப் பகுதியில் 11 பந்துகளில் ஒரு ஓட்டம் எடுத்து மீண்டும் சுவானின் பந்துவீச்சிலாட்டமிழந்தார்.இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி ஒரு ஆட்டப்பகுதி மற்றும் 225 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[9]
2005 ஆம் ஆண்டில் இங்கிலாந்து அணி பாக்கித்தானில் சுற்றுப் பயணம் செய்தது. டிசம்பர் 21, ராவல் பிண்டியில் நடைபெற்ற இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானர்[1]. இந்தப் போட்டியில் 7 ஒவர்கள் வீசி 14 ஓட்டங்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 2 இலக்குகளைக் கைப்பற்றினார். இதில் ஒரு ஓவரை மெய்டனாக வீசினார். இவரின் பந்துவீச்சு சராசரி 2.00 ஆகும். இதில் இங்கிலாந்து அணி 6 இலக்குகள்வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[10]
பின் 2010 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆசியக் கோப்பைத் தொடரில் வங்காளதேசத் துடுப்பாட்ட அணிக்கு [1] எதிரன ஐந்தாவது போட்டியில்10 ஓவர்கள் வீசி 60 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 1 இலக்கினைக் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் பாக்கித்தான் அணி 139 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[11]
2007 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்துயன் பிரீமியர் லீக் போட்டியில் இவர் டெல்லி டேர்டெவில்ஸ் அணி சார்பாக விளையாடினார். அந்த அணி நிர்வாக,ம் இவரை $650,000 அமெரிக்க டாலர்கள் மதிப்பிலேலத்தில் எடுத்தது.[12] அக்தர் இவர் தன்னை மட்டை கொண்டு தாக்கியதாக புகார் தெரிவித்தார்.[13] பின்னர் அக்தர் உலகக் கோப்பைத் தொடரிலி இருந்து நீக்கப்பட்டார்.[14][15] மேலும் அவர் 5 போட்டிகளில் விளையாடத் த்டை விதிக்கப்பட்டது. இந்த சண்டைக்கு அப்ரிடிதான் காரணம் எனவும் தனது குடும்பத்தினைப் பற்றி தவறாகப் பேசியதாகவும் அதனால் தன்னால் தாங்கிக் கொள்ள இயலவில்லை எனவும் அவர் கூறினார்.[16] ஆனால் அப்ரிடி அந்தக் குற்ற சாட்டினை மறுத்தார்.[16] பன்னாட்டு இருபது 20 போட்டியில் 18 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 4 ஓட்டங்களை எடுத்தார். இதுவே இருபதுஓவர் போட்டியின் இரண்டாவது சிறந்த பந்து வீச்சாக கிரிக் இன்போ ரசிகர்கள் தேர்வு செய்தனர்.[17].