மோடுரி சத்யநாராயண் | |
---|---|
இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் (நியமன உறுப்பினர்) | |
பதவியில் 3 ஏப்ரல் 1952 – 2 ஏப்ரல் 1966 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 2 பிப்ரவரி 1902 தொண்டபாடு, கிருஷ்ணா மாவட்டம், ஆந்திரப் பிரதேசம் |
இறப்பு | மார்ச்சு 6, 1995 | (அகவை 93)
துணைவர் | சூரியகாந்த தேவி |
வேலை | சமூக ஆர்வலர், அரசியல்வாதி |
மோட்டூரி சத்தியநாராயணன் (Moturi Satyanarayana) (2 பிப்ரவரி 1902 – 6 மார்ச் 1995) இந்திய இயக்க வீரரும், இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தின் உறுப்பினரும், 1966 முடிய மாநிலங்களவையின் நியமன உறுப்பினரும் ஆவார்.[1]இவர் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இந்தி மொழியை இந்தியாவின் அலுவல் மொழியாக ஆக்க பாடுபட்டவர். இவர் தமது பிற்கால வாழ்க்கையை தென்னிந்தியாவில் இந்தி மொழியைப் பரப்ப பாடுபட்டார்.
இவரது சேவையப் பாராட்டி இந்திய அரசு 1954ல் பத்மசிறீ விருது மற்றும் 1962ல் பத்மபூசண் விருது வழங்கிப் பாராட்டியது.[2]
இந்தியக் கல்வி அமைச்சகத்தின் சார்பில் இந்திய இலக்கியத்திற்கு இவரது பெயரில் ஆண்டுதோறும் மோடுரி சத்யநாராயணன் விருது வழங்கப்படுகிறது.