வாங் குவான்சாங் | |
---|---|
பிறப்பு | 15 பெப்ரவரி 1976 உலியன் கவுண்டி, ஷான்டோங், சீனா |
தேசியம் | சீனம் |
பணி | வழக்குறைஞர் |
வாங் குவான்சாங் (Wang Quanzhang) (மரபுவழிச் சீனம்: 王全璋; பின்யின்: Wáng Quánzhāng,15 பிப்ரவரி 1976-இல் சீனாவில் பிறந்த வழக்கறிஞரும், பன்னாட்டு மனித உரிமை செயற்பாட்டாளரும் ஆவார். இவர் 2009-இல் சீன நடவடிக்கைகள் எனும் மனித உரிமைகளுக்கான தொண்டு நிறுவனத்தை துவக்கியவர் ஆவார்.[1]
சீன அதிபரும், சீனப் பொதுவுடமைக் கட்சியின் பொதுச் செயலாளருமான சீ சின்பிங்க்கு எதிராக சீனா முழுவதும் வழக்கறிஞர்கள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் 9 சூலை 2015 முதல் துவங்கிய போராட்டத்தில் கலந்து கொண்ட வாங் குவான்சாங் மற்றும் பிறரும் 709 கடும் நடவடிக்கை அல்லது 709 வழக்கில் வாங் குவான்சாங் ஆகஸ்டு 2015-இல் கைது செய்யப்பட்டார்.[2][2] எவ்வித விசாராணை இன்றி கொடுஞ்சிறையில் அடைக்கப்பட்டிருந்த வாங் குவான்சாங் 4 ஏப்ரல் 2019 அன்று விடுதலை செய்யப்பட்டார்.[3]