ஆப்கானிஸ்தானின் மசார் ஈ சரீப் நகரிலுள்ள ஷாஹீன் இராணுவ முகாம் மீது தாலிபான் தீவிரவாதிகள் 21 ஏப்ரல் 2017 அன்று துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியதில் 135 ஆப்கானிய தேசியப் படை இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்; மேலும் 65 பேர் காயமடைந்தனர்[1]. தாக்குதல்தாரிகள் இராணுவ சீருடை அணிந்து தொழுகையில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். மொத்தம் பத்து தாக்குதல்தாரிகள் இத்தாக்குதலில் ஈடுபட்டனர். தாக்குதல்தாரிகளுள் எழுவர் கொல்லப்பட்டனர், இருவர் தற்கொலை குண்டுதாரிகளாகி வெடித்துச் சிதறி இறந்தனர்; மேலும் ஒருவர் ஆப்கான் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார்[2]. உள்ளூர் நேரப்படி மதியம் 2 மணிக்கு தொடங்கிய தாக்குதல் பின்மாலைப் பொழுதில் நிறைவடைந்தது. இத்தாக்குதலுக்கு தலிபான் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுக்கொண்டனர்[3]. அப்துல் சலாம் கொல்லப்பட்டதன் எதிர்வினையாகவே இத்தாக்குதல் நடத்தப்பட்டது.
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)