1971 மக்கள் விடுதலை முன்னணி கிளர்ச்சி

1971 மக்கள் விடுதலை முன்னணி கிளர்ச்சி
1971 JVP insurrection
பனிப்போர் பகுதி

தெனியாய காவல் நிலையம் மீது தாக்குதல்
நாள் 5 ஏப்பிரல் – சூன் 1971
இடம் இலங்கை
இலங்கை அரசு வெற்றி
  • கிளர்ச்சித் தலைவர்கள் பிடிக்கப்பட்டனர், மீதமுள்ள உறுப்பினர்கள் சரணடைந்தனர்
  • இலங்கை அரசாங்கம் முழுத் தீவின் மீதும் மீண்டும் கட்டுப்பாட்டை ஏற்படுத்தியது.
  • வட கொரிய தூதர்கள் வெளியேற்றப்பட்டனர்
நிலப்பகுதி
மாற்றங்கள்
இலங்கையின் தென் மாகாணம், சப்ரகமுவா மாகாணம் பல கிழமைகளாக கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்தன.
பிரிவினர்
 இலங்கை

இராணுவத் தலையீடு:

மவிமு
ஆதரவு:
வட கொரியா வட கொரியா
தளபதிகள், தலைவர்கள்
இலங்கை சிறிமாவோ பண்டாரநாயக்கா
இலங்கை சேபால ஆட்டிகல
இலங்கை எஸ். ஏ. திசாநாயக்க
இலங்கை டி. வி. ஹண்டர்
இலங்கை பாடி மெண்டிசு
ரோகண விஜயவீர
விஜயசேன விதானகே (சனத்)  
டபிள்யூ. டி. கருணாரத்தின
என். ஜயசிங்க (லொக்கு அத்துல)
பி. குமாரசிறி  (கைதி)

வால்ட்டர் டி. சில்வா

படைப் பிரிவுகள்
*இலங்கை இலங்கைப் படைத்துறை
*சோசலிச மாணவர் ஒன்றியம்
பலம்
7,000 தரைப்படை
1,900 வான்படை
2,000 கடற்படை
சோவியத் வான்படை: 60
10,000–12,000 போராளிகள்
80,000 பின்பற்றுவோர் (மதிப்பீடு)
இழப்புகள்
காவல்துறை: 37 இறப்புகள்; 195 காயம்

படைத்துறை: 26 இறப்புகள்; 310 காயம்; 1 வானூர்தி

15,000 இறப்புகள் (ரோகண விஜயவீரவின் படி)
<12,000 கொல்லப்பட்டனர் (அரச மதிப்பீடு)[2]
5,700 சரண்[3]
வட கொரியா பல கைதுகள், இலங்கை-இந்தியக் கடற்படையால் கைப்பற்றப்பட்ட பல வட கொரிய விநியோகக் கப்பல்கள்[4]
பல தலைவர்கள் கைது[a]
12,000 இறப்புகள் (அரசுத் தகவல்)
15,000 - 20,000+ இறப்புகள் (நடுநிலை மதிப்பீடுகள்)[5]
50,000 இற்கும் அதிகமான இறப்புகள் (ஆர்வலர் மதிப்பீடுகள்)[2]
இரண்டாம் கட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் இறப்பு.[6]

1971 மக்கள் விடுதலை முன்னணி கிளர்ச்சி (1971 Janatha Vimukthi Peramuna insurrection) அல்லது 1971 கிளர்ச்சி (1971 Revolt) என்பது அன்றைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்காவின் கீழிருந்த இலங்கையின் ஐக்கிய முன்னணி அரசாங்கத்திற்கு எதிராக கம்யூனிச மக்கள் விடுதலை முன்னணி (மவிமு) நடத்திய தோல்வியுற்ற ஆயுதக் கிளர்ச்சி ஆகும். இந்தக் கிளர்ச்சி 1971 ஏப்ரல் 5 தொடங்கி 1971 சூன் வரை நீடித்தது. படையினரையும் ஆயுதங்களையும் அனுப்பிய நட்பு நாடுகளின் வலுவான ஆதரவுடன் இலங்கைப் படைத்துறையால் பிராந்தியங்கள் மீண்டும் கைப்பற்றப்படும் வரை, கிளர்ச்சியாளர்கள் பல வாரங்கள் தென், சப்ரகமுவா மாகாணங்களின் நகரங்களையும் கிராமப்புறங்களையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.[7] அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான இந்த முதல் முயற்சி ஆயுதப் பலத்தால் விரைவாக நசுக்கப்பட்டாலும், 1987 ஆம் ஆண்டில் மக்கள் விடுதலை முன்னணி தீவின் தெற்கு, மத்திய, மேற்கு மாகாணங்களில் குறைந்த தீவிரம் கொண்ட கிளர்ச்சியைத் தொடங்கியது, ஆனால் அது பல மாதங்களுக்கு நீடித்தது.

கிளர்ச்சி முறையாக 1971 இல் தொடங்கியது, ஆனால் முதல் தாக்குதல்கள் 1970 இல் நடந்தன. புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட, சோசலிச ஆதரவு ஐக்கிய முன்னணி அரசாங்கத்திற்கு எதிராகத் தீவு முழுவதும் போர்க்குணமிக்க எதிர்ப்பைத் தொடங்குவதற்கு முன்பு, மக்கள் விடுதலை முன்னணி வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சியை எதிர்த்துப் போராடியது. சிறிமாவோ பண்டாரநாயக்கா அரசாங்கத்தின் சோசலிசப் பின்னணி பல நாடுகளின் கவனத்தை ஈர்த்தது, அவை அதை ஆதரிக்க முன்வந்தன. சோவியத் ஒன்றியம் 60 வான்படை வீரர்களை அனுப்பியது;[8] இந்தியா வட கொரியக் கப்பல்களையும் துறைமுகங்களைத் தாக்கிய ஒரு சீன சரக்குக் கப்பலையும் நிறுத்தி, கோட்டைகளைப் பாதுகாத்தது, சீனா இராசதந்திர உதவிகளை வழங்கிய போதிலும், அது கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவளிப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டது; சீனத் தூதரக அதிகாரிகள் வட கொரியாவைத் தொடர்பு கொண்டதாகக் கூறப்படுகிறது. வடகொரியா கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் வழங்கியது.

குறிப்புகள்

[தொகு]
  1. நா. சண்முகதாசன் கைது, கட்சி கிட்டத்தட்ட முடக்கப்பட்டது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Revolution in retrospect". The Sunday Times. 1 April 2001 இம் மூலத்தில் இருந்து 24 April 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230424171021/https://www.sundaytimes.lk/010401/spec.html. 
  2. 2.0 2.1 "April 1971". Peace and Conflict Timeline. Archived from the original on 14 July 2014. Retrieved 16 August 2015.
  3. Kearney 1975.
  4. Gunaratna 1990, ப. 109.
  5. Jayasinghe, Amal (3 September 2001). "Analysis: Sworn enemy turned ally". BBC News. http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/1523458.stm. 
  6. "Ceylon/Sri Lanka (1948–Present)". University of Central Arkansas Department of Political Science. University of Central Arkansas. Retrieved 3 May 2024.
  7. Halliday, Fred (September–October 1971). "The Ceylonese Insurrection". New Left Review. Retrieved 14 February 2018.
  8. Iqbal 1972, ப. 7: "In the past because of இலங்கை's pro-West regimes, its relations to the Soviet Union had not been very close, but the victory of the left had raised Russian hopes."}}

உசாத்துணைகள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]