நிதியமைச்சர் அருண் ஜெட்லி 2014- 2015ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை சூலை 10, 2014 அன்று தாக்கல் செய்தார்.
- தனிநபரின் வருமான வரி விலக்கு உச்சவரம்பு 2 இலட்சத்திலிருந்து 2.5 இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது, மூத்த குடிமக்களுக்கு இது 2.5 இலட்சத்திலிருந்து 3 இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
- 80சி பிரிவின் கீழ் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு 1 இலட்சத்திலிருந்து 1.5 இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
- பொதுச் சேம நல நிதியில் ஒரு நிதியாண்டில் முதலீடு செய்ய உச்ச வரம்பாக இதுவரை இருந்து வந்த 1 இலட்சம் 1.5 இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
வருவாய் பற்றாக்குறை
[தொகு]
நிதிப் பற்றாக்குறை 4.1% ஆக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும், இரு ஆண்டுகளில் நிதிப்பற்றாக்குறை 3% ஆக குறைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
வளர்ச்சி மற்றும் பணவீக்கம்
[தொகு]
- வளர்ச்சி 5.4% -லிருந்து 5.9% ஆக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது.
- 2ஆம் நிலை மற்றும் 3ஆம் நிலை நகரங்களில் தனியார் கூட்டுடன் (Public Private Partnership) விமான நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
- புதியதாக 5 ஐஐடி, 5 ஐஐஎம் மற்றும் 4 எய்ம்ஸ் மருத்துவமனைகள் திறக்கப்பட உள்ளது.
- கங்கை நதியில் நீர்வழிப் போக்குவரத்தை ஏற்படுத்த ஜல் மார்க் விகாஸ் என்கிற பெயரில் 4200 கோடி ரூபாயில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
- புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (New and Renewable Energy) துறையில் 500 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படவுள்ளது.
- சர்தார் வல்லபாய் படேலுக்கு சிலை அமைக்க 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
- பார்வைச் சவால் உடையோர் படிப்பதற்கான புத்தகங்களை பிரெயில் முறையில் அச்சிடும் அச்சகங்கள் புதிதாக 15-ம், இயக்கத்திலிருக்கும் 10 அச்சங்களை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
- கிராமப்புறங்களில் இணையம் மற்றும் தொழில்நுட்பத்தை கொண்டு சேர்க்க 500 கோடியில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
- விவசாயிகளுக்காக பிரத்தியேகமாக ஒரு தொலைக்காட்சி சேவையைத் தொடங்க 100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்களின் கருத்துகள்
[தொகு]
- "இந்த வரவு செலவுத் திட்டம் ஒரு ஆரம்பமே; முடிவல்ல" என நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார்[1].
மாநில முதல்வர்களின் கருத்துகள்
[தொகு]
- நோக்கம், இலட்சியம், செயல்பாடு இவை மூன்றிலும் குறைபாடுள்ள வரவு செலவுத் திட்டமென மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்[2].
பத்திரிகைகளின் விமர்சனங்கள்
[தொகு]
- பிரமாதமுமில்லை, மோசமுமில்லை... - தினமணி நாளிதழின் தலையங்கம் [3].
- More continuity than change - தி இந்து நாளிதழின் தலையங்கம் [4].
- மாற்றமல்ல தொடர்ச்சிதான்! - தி இந்து (தமிழ்) நாளிதழின் தலையங்கம் [5].
பொருளாதார நிபுணர்களின் விமர்சனக் கட்டுரைகள்
[தொகு]
- மோசமான சூழலில் சிறப்பான பட்ஜெட்! - தினமணி நாளிதழில் எஸ். குருமூர்த்தியின் கட்டுரை [6].
அரசியல் தலைவர்களின் விமர்சனக் கட்டுரைகள்
[தொகு]
- Whose budget is it anyway? - தி இந்து நாளிதழில் பிருந்தா காரத்தின் கட்டுரை [7].