2017 ஐசிசி வாகையாளர் கோப்பை (2017 ICC Champions Trophy, 2017 ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி) என்பது இங்கிலாந்து மற்றும் வேல்சில் உள்ள அரங்குகளில் 2017 சூன் 1 முதல் 18 வரை 8 துடுப்பாட்ட அணிகளுக்கிடையே நடைபெற்ற ஒருநாள் பன்னாட்டுப் போட்டித் தொடராகும்.[1] இப்போட்டித் தொடரில் பாக்கித்தான் அணி முதற்தடவையாக வெற்றி பெற்று கோப்பையை வென்றது. இறுதிப் போட்டியில் இவ்வணி இந்திய அணியை 180-ஓட்டங்களால் வென்றது.[2][3]
இவ்வகையிலான போட்டிகளில் இது எட்டாவது போட்டியாகும். ஐசிசி துடுப்பாட்ட தரவரிசையில் 2015 செப்டம்பர் 30 இல் முதல் எட்டு இடங்களை பிடித்த அணிகள் இரண்டு குழுக்களாகப் பிரிந்து இதில் பங்குபெற்றியிருந்தன். ஒவ்வொரு குழுவிலும் நான்கு அணிகள் விளையாடின. வங்காளதேசம் இந்த முறை மேற்கிந்திய அணிக்குப் பதிலாக விளையாடும் வாய்ப்பைப் பெற்றது. வங்காளதேச அணி 1006 ஆம் ஆண்டிற்குப் பின்னர் முதல் முறையாக இத்தொடரில் விளையாட வாய்ப்புப் பெற்றது. அதேசமயம் மேற்கிந்திய அணி முதற்தடவையாக விளையாடும் வாய்ப்பை இழந்தது.
மான்செஸ்டரில் இடம்பெற்ற குண்டுவெடிப்பை அடுத்து அங்கு மிகப்பலமான பாதுகாப்பு வழங்கப்பட்டது.[4][5]
இங்கிலாந்து நாட்டில் இந்த போட்டிகள் நடைபெறுவதால் அந்த அணி தானாக தகுதி பெற்றுவிட்டது. மற்றைய ஏழு அணிகள் ஐசிசி தரவரிசையின் செப்டம்பர் 30, 2015 அடிப்படையில் தகுதிபெற்றன.[6]
தயார்ப்படுத்தல் போட்டிகளில் ஒவ்வோர் அணியும் 15 வீரர்களைக் களத்தில் இறக்க முடியும், ஆனாலும் ஒவ்வோர் ஆட்டப்பகுதியிலும் 11 பேர் மட்டுமே துடுப்பாடவோ, அல்லது பந்து வீச்சிலோ ஈடுபடலாம்.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
மகுமுதுல்லா ரியாத், சகீப் அல் அசன் இருவரும் இணைந்து விளையாடி ஒருநாள் போட்டி ஒன்றில் வங்காளதேசத்துகாக அதிக ஓட்டங்களைப் (224) பெற்று சாதனை படைத்தனர்.[14]
ஐசிசி வாகையாளர் போட்டி ஒன்றில் வங்காளதேசம் வெற்றி பெற்ற முதலாவது போட்டி இதுவாகும்.[15]
புள்ளிகள்: வங்காளதேசம் 2, நியூசிலாந்து 0.
இப்போட்டி முடிவை அடுத்து நியூசிலாந்து தொடரில் இருந்து விலகியது.[14]
பென் ஸ்டோக்சு 102* (109) ஜோசு ஆசில்வுட் 2/50 (9 ஓவர்கள்)
இங்கிலாந்து 40 ஓட்டங்களால் வெற்றி (ட/லூ) எட்சுபாஸ்டன், பர்மிங்காம் நடுவர்கள்: கிறிசு காஃபனி (நியூ), குமார் தர்மசேன (இல) ஆட்ட நாயகன்: பென் ஸ்டோக்சு (இங்)
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
இங்கிலாந்து ஆட்டம் மழை காரணமாக இடைநிறுத்தப்பட்டது.
புள்ளிகள்: இங்கிலாந்து 2, ஆத்திரேலியா 0.
இவ்வாட்ட முடிவை அடுத்து ஆத்திரேலியா போட்டித் தொடரில் இருந்து விலகியது. வங்காளதேசம் அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.[16]
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
இவ்வாட்டம் இரு அணிகளுக்குமிடையில் நடந்த 150வது ஒருநாள் போட்டியாகும்.[18]
ஒருநாள் போட்டிகளில் வெற்றிகரமான மிக அதிகமான ஓட்ட-இலக்கைப் பெற்றது இவ்வாட்டத்தில் ஆகும். அத்துடன் வாகையாளர் போட்டி ஒன்றில் மிக அதிகமான வெற்றிகரமான ஓட்ட இலக்கைப் பெற்ற முதலாவது அணியும் இலங்கை ஆகும்.[19][20]