அஜய் குமார் சிங் (A. K. Singh) என்பவர் அந்தமான் நிக்கோபார் தீவுகளின் முன்னாள் துணைநிலை ஆளுநர் ஆவார்.[1] இவர் சைனிக் பள்ளி ரேவா மற்றும் தேசியப் பாதுகாப்பு அகாடமியின் முன்னாள் மாணவர் ஆவார். இவர் இந்தியத் தரைப்படையின் தெற்கு படைத்தளத்தின் முன்னாள் தளபதி ஆவார்.[2]
சிங் ஜூலை 2013-ல் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் 11வது துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டு 8 ஜூலை 2013 அன்று பதவியேற்றார்.[3] இவருக்கு 2014-ல் ஜூலை முதல் 2016 மே வரை புதுச்சேரி நிர்வாகத்தின் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.
சிங் அந்தமான் மேம்பாட்டில் முதலாவது மருத்துவக் கல்லூரி[4] மற்றும் தெற்கு அந்தமானின் இரண்டாவது பட்டப்படிப்பு கல்லூரியினைத் துவக்கியதில் இவரது பங்களிப்புகளுக்காக நன்கு அறியப்படுகிறார்.[5]
பரம் விசிட்ட சேவா பதக்கம் | அதி விசிட்ட சேவா பதக்கம் | சேனா பதக்கம் | விசிட்ட் சேவா பதக்கம் |
கார்கில் வெற்றிப் பதக்கம் | ஆபரேஷன் பராக்ரம் பதக்கம் | சைன்ய சேவா பதக்கம் | உயர் உயர சேவை பதக்கம் |
50வது சுதந்திர ஆண்டு பதக்கம் | 30 வருட நீண்ட சேவை பதக்கம் | 20 வருட நீண்ட சேவை பதக்கம் | 9 ஆண்டுகள் நீண்ட சேவை பதக்கம் |