அத்தலூர் Attalur | |
---|---|
கிராமம் | |
Dynamic map | |
ஆள்கூறுகள்: 16°32′08″N 80°15′19″E / 16.535630°N 80.255274°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
மாவட்டம் | பாலநாடு |
வட்டம் (தாலுகா) | அமராவதி மண்டல் |
அரசு | |
• வகை | பஞ்சாயத்து ராச்சு |
• நிர்வாகம் | அத்தலூர் கிராம ஊராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,524 ha (3,766 acres) |
மக்கள்தொகை (2011)[3] | |
• மொத்தம் | 4,783 |
• அடர்த்தி | 310/km2 (810/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் | தெலுங்கு |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 522436 |
இடக் குறியீடு | +91–8640 |
வாகனப் பதிவு | AP |
அத்தலூர் (Attalur) இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் பாலநாடு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமமாகும். இது சத்தேனப்பள்ளி வருவாய் பிரிவின் அமராவதி மண்டலத்தில் அமைந்துள்ளது. இந்த கிராமம் ஆந்திரப் பிரதேச தலைநகர் பிராந்தியத்தின் ஒரு பகுதியாக, ஆந்திரப் பிரதேச தலைநகர் மண்டல மேம்பாட்டு ஆணையத்தின் அதிகார வரம்பின் கீழ் உள்ளது.[4]
வட்டத் தலைமையகமான அமராவதி நகரிலிருந்து தென்மேற்கே 16°32′08′′N 80°15′19′′E/16.535630 °N 80.255274 °E/[5] என்ற அடையாள ஆள்கூறுகளில் அத்தலூர் அமைந்துள்ளது. 1524 எக்டேர் அதாவது 3,770 ஏக்கர் பரப்பளவில் இக்கிராமம் பரவியுள்ளது.
அத்தலூர் கிராம பஞ்சாயத்து என்பது கிராமத்தின் உள்ளாட்சி அரசாங்கம் ஆகும். தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர் ஒருவர் பிரதிநிதித்துவப்படுத்தும் வார்டுகள் இங்கு உள்ளன. தற்போதைய சர்பஞ்ச் காலியாக உள்ளது, இது வார்டு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறது. இந்த கிராமம் பஞ்சாயத்து ராச்சு நிறுவனங்களின் இடைநிலை மட்டத்தில் அமராவதி மண்டல் பரிசத்து நிர்வகிக்கப்படுகிறது.[5]
கல்வியாண்டுக்கான பள்ளி தகவல் அறிக்கையின்படி, கிராமத்தில் மொத்தம் 7 பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் 5 மண்டல் பரிசத்து தொடக்கப் பள்ளிகளும் 2 தனியார் பள்ளிகளும் அடங்கும்.[6]