மாண்புமிகு அந்தோணி செல்வநாயகம் | |
---|---|
பினாங்கு பிஷப் எமரிட்டஸ் | |
ஆட்சி பீடம் | பினாங்கு மறைமாவட்டம் |
ஆட்சி துவக்கம் | 8 நவம்பர் 1983 |
ஆட்சி முடிவு | 7 சூலை 2012 |
முன்னிருந்தவர் | அந்தோனி சோட்டர் பெர்னாண்டஸ் |
பின்வந்தவர் | செபாஸ்டியன் பிரான்சிஸ் |
பிற பதவிகள் | கோலாலம்பூர் துணை ஆயர் |
திருப்பட்டங்கள் | |
குருத்துவத் திருநிலைப்பாடு | 20 திசம்பர் 1969 |
ஆயர்நிலை திருப்பொழிவு | 1 செப்டம்பர் 1980 |
பிற தகவல்கள் | |
பிறப்பு | 24 அக்டோபர் 1935 பெந்தோங், பகாங், பிரித்தானிய மலேயா |
குடியுரிமை | மலேசியர் |
சமயம் | கத்தோலிக்க திருச்சபை |
இல்லம் | ஜார்ஜ் டவுன், பினாங்கு |
அந்தோணி செல்வநாயகம் (Antony Selvanayagam) என்பவர் மலேசியாவின் பினாங்கு மறைமாவட்டத்தின் அருட்தந்தையர் ஆவார். கோலாலம்பூரின் 2வது பேராயராக கோலாலம்பூர் உயர்மறைமாவட்டத்திற்கு இவரது முன்னோடி பிசப் அந்தோனி சோட்டர் பெர்னாண்டஸ் இடமாற்றம் செய்யப்பட்ட பின்னர் இவர் பினாங்கின் 4வது பிசப்பாக போப் இரண்டாம் ஜான் பால் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1980-1983 வரை, இவர் கோலாலம்பூர் மறைமாவட்டத்தில் துணை ஆயராக இருந்தார். முதுமை காரணமாக 2012 இல் ஓய்வு பெற்றார், இவருக்குப் பிறகு எம்.எஸ்.ஜி.ஆர். பினாங்கின் புதிய பிஷப்பாக செபாஸ்டியன் பிரான்சிஸ் நியமிக்கப்பட்டார். இவர் தேவாலயத்தின் எக்குமெனிசம் மற்றும் சமயங்களுக்கு இடையேயான விவகாரங்களுக்கான ஆணையத்தின் தலைவராக பணியாற்றினார்.[1]