அனசுயா சென்குப்தா (Anasuya Sengupta) ஓர் இந்திய கவிஞர், எழுத்தாளர், ஆர்வலர் மற்றும் இணையத்தில் ஒதுக்கப்பட்ட குரல்களுக்கான பிரதிநிதித்துவவாதியாக பரவலாக அறியப்படுகிறார். [1] [2]
சென்குப்தா 1974 ஆம் ஆண்டில் இவரது தந்தை அபிஜித் செங்குப்தா, பொய்ல் செங்குப்தா (அம்பிகா கோபாலகிருஷ்ணன் ) ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். இவரது தந்தை இந்திய நிர்வாக அதிகாரி ஆவார், இவரது தாய் , ஒரு நடிகை, குழந்தைகள் இலக்கியத்தின் ஆசிரியர் மற்றும் நாடக ஆசிரியர் ஆவார். [3] இவர் தனது குழந்தைப் பருவத்தின் பெரும்பகுதியை தென்னிந்தியாவின் ஒரு பகுதியான வட கர்நாடகாவில் கழித்தார்.[சான்று தேவை]
இவரது வாழ்க்கையினைப் பற்றி குறிப்பிடுகையில், செங்குப்தா, "நான் சமூக நீதிக்கு அர்ப்பணிப்புள்ள குடும்பத்தில் வளர்ந்தவள்" என்று குறிப்பிட்டார். இவர் ஆங்கிலம், இந்தி, கன்னடம், பெங்காலி, தமிழ் மற்றும் மலையாளம் பேசுகிறார். [4]
இந்திரா நகரில் உள்ள தேசிய பொதுப் பள்ளியில் 1992 ஆம் ஆண்டு தனது 12 ஆம் வகுப்பை முடித்தார். செங்குப்தா இந்தியாவின் புதுதில்லியில் உள்ள டெல்லி பல்கலைக்கழகத்தின் ஒரு கல்லூரியான லேடி ஸ்ரீ ராம் மகளிர் கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார், அங்கு இவர் 1995 இல் கௌரவ பட்டம் பெற்றார். [5] லேடி ஸ்ரீ ராம் மகளிர் கல்லூரியின் முன்னாள் மாணவராக இவர் குறிப்பிடப்படுகிறார், செங்குப்தா தனது இளங்கலை பட்டப்படிப்பில் நடைபெற்ற 2014 பாலின அறிவு கல்வி மாநாட்டில் தனது "அமைதி" என்ற கவிதையின் ஒரு பகுதியை வாசிக்க அழைக்கப்பட்டார். [6]
1998 ஆம் ஆண்டில், ரோட்சு அறிஞராகப் படிக்கும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ராணி எலிசபெத் ஹவுஸில் இருந்து வளர்ச்சிப் படிப்புகளில் முதுகலைப் பட்டம் பெற்றார். [7] பின்னர் இவர் ஆக்ஸ்போர்டில் அரசியலில் தனது முனைவர் பட்டத்தை கர்நாடகத்தில் காவல்துறையில் உள்ள முறையான மற்றும் முறைசாரா கட்டமைப்புகள் மற்றும் நடைமுறைகளைப் பயின்றார். [8] மேலும், செங்குப்தா 2007-2009 வரை கலிபோர்னியாவின் பெர்க்லி பல்கலைக்கழகத்தில் விருந்துரை அறிஞராக இருந்தார். [4]
முன்னாள் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் இலரி கிளிண்டன் மார்ச் 1995 இல் செங்குப்தாவின் கவிதைகளில் ஒன்றை அறிந்திருந்தார், கிளின்டன் முதல் பெண்மணியாக இருந்தபோது இந்தியாவிற்கு வருகை தந்தார். பின்னர், டெல்லியில் தனது உரைகளிலும், சீனாவின் பெய்ஜிங்கில் நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் மகளிர் மாநாட்டிலும் கிளிண்டன் அதைப் பயன்படுத்தினார். [9] [5]
சைலன்சு என்பதில் இருந்து,
பல பெண்கள்
பல நாடுகளில் இருந்து
ஒரே மொழியினைப் பேசுகிறார்கள்
"அமைதி" எனும் மொழியில்
இந்தக் கவிதை கிளின்டனின் சுயசரிதையான வாழ்க்கை வரலாற்றில் "அமைதி இங்கே பேசப்படவில்லை" என்ற தலைப்பில் ஒரு அத்தியாயத்தை எழுதத் தூண்டியது. [9]
செங்குப்தா
கலிபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள விக்கிமீடியா அறக்கட்டளையின் தலைமை மானிய அதிகாரியாக சென்குப்தா இருந்தார். [10][11]
சிகோ பூட்டர்சுவுடன், ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கா உள்ளிட்ட இணையத்தில் ஓரங்கட்டப்பட்ட சமூகங்களின் (உலகின் பெரும்பான்மை) அறிவை மையப்படுத்தும் உலகளாவிய பிரச்சாரமான ஹூசு டாலெட்ஜ் இணை நிறுவனர் ஆவார். [12] இவர் அடேல் விரானாவுடன் இணைந்து நிறுவனத்தின் இணை இயக்குநராக பணிபுரிகிறார். இந்தக் குழுவானது "உலகளாவிய, பன்மொழிப் பிரச்சாரமாக விவரிக்கப்பட்டுள்ளது.[சான்று தேவை]