அனிதா ரத்னம் | |
---|---|
![]() அனிதா ரத்னம் (2012) | |
பிறப்பு | 21 மே 1954 மதுரை, தமிழ்நாடு |
இருப்பிடம் | சென்னை |
தேசியம் | இந்தியன் |
கல்வி | கலாசேத்திரா |
பணி | நடனக் கலைஞர், நடன இயக்குநர் |
அறியப்படுவது | இயக்குநர், அரங்கம் இண்டரக்டிவ் (Arangham Interactive), சென்னை |
வலைத்தளம் | |
www.anitaratnam.com |
அனிதா ரத்னம் (பிறப்பு: மே 21, 1954) தமிழகத்தைச் சேர்ந்த இந்தியப் பாரம்பரிய நடனக் கலைஞர், நடன ஆசிரியர். பரத நாட்டியத்தில் முதன்மை பயிற்சி பெற்ற இவர், கதகளி, மோகினியாட்டம், களரிப்பயிற்று எனும் நடன மற்றும் போர்க் கலைகளிலும் முறையான பயிற்சி பெற்றுள்ளார். இக்கலைகள் ஒருங்கிணைந்த ஒரு தனிப்பட்ட நடன பாணியை உருவாக்கி, நியோ பாரத் நாட்டியம் எனப் பெயரிட்டுள்ளார்.[1][2][3]. இவர் 40 ஆண்டுகளாக 15 நாடுகளில் தனது நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் (2000), பாய்ஸ் (2003) ஆகிய தமிழ்த் திரைப்படங்களில் நடித்தும் இருக்கிறார். இவரின் பணி நடனம், நாடகம், பேசும் சொல், சடங்கு, தொல்லியல், நாடகவியல் மற்றும் பெண்கள் பிரச்சினைகள் போன்ற பல பிரிவுகளை எடுத்தாழ்கிறது.
1992 இல் சென்னையில் அமைக்கப்பட்ட "அரங்கம்" என்ற அறக்கட்டளையின் நிறுவனரும் மற்றும் இயக்குநரும் ஆவார். இவர் 1993 ஆம் ஆண்டில் "அரங்கம் நடன அரங்கம்" செயல்திறன் நிறுவனத்தையும் நிறுவினார். 2000 ஆம் ஆண்டில் இவர் இந்திய நடனத்திற்கான "நர்த்தகி.காம்" என்ற இணையதளம் ஒன்றை உருவாக்கினார். பல ஆண்டுகளாக, இந்தியாவிலும் வெளிநாட்டிலும் நடனக் கலைஞராகவும், அறிஞராகவும், கலாச்சார ஆர்வலராகவும் பணியாற்றியதற்காக இவர் பல விருதுகளையும் அங்கீகாரங்களையும் பெற்றுள்ளார்.[4][5]
அனிதா ரத்னம் தனது ஆரம்ப நடனப் பயிற்சியை பரதநாட்டிய குருவான அடையார் கே. லட்சுமணனின் கீழ் பெற்றார்.[6] பின்னர் ருக்மிணி தேவி அருண்டேலின் 'கலாசேத்திராவுக்கு' மேம்பட்ட பயிற்சிக்காகச் சென்று நடனத்தில் முதுகலை சான்றிதழ் பட்டம் பெற்றார். இவர் பரதநாட்டியத்திலும், கதகளி மற்றும் கேரளாவின் பாரம்பரிய நடனங்களான மோகினியாட்டத்திலும் பயிற்சி பெற்றார்.[7]
நியூ ஆர்லியன்ஸ் பல்கலைக்கழகத்தில் அரங்கம் மற்றும் தொலைக்காட்சியில் முதுகலைப் பட்டம் பெற்றார். அடுத்த பத்து ஆண்டுகளை அமெரிக்காவில் ஒரு தொலைக்காட்சி தயாரிப்பாளர் / வர்ணனையாளராக இந்தியாவில் கலை, பயணம் மற்றும் கலாச்சாரம் குறித்த வாராந்திர தொடர் உள்ளிட்ட தயாரிப்புகளுடன் கழித்தார். 1992 ஆம் ஆண்டில் சென்னையில் அமைக்கப்பட்ட 'அரங்கம்' அறக்கட்டளையை அமைத்தார், அதைத் தொடர்ந்து 1993 ஆம் ஆண்டில் அரங்கம் நடன அரங்கம் என்ற செயல்திறன் நிறுவனத்தை நிறுவினார்.[8] ஒரு நவீனத்துவவாதியான, ரத்னம், பாரம்பரிய நடனமான பரதநாட்டியத்தில் தனது ஆரம்ப பயிற்சியுடன் தொடர்புடைய பல்வேறு இயக்கங்கள் மற்றும் சடங்கு மரபுகளை ஆராய்ந்துள்ளார்.
பண்டைய தமிழ் கலை கலைகளின் புத்துயிர் பெறுவதில் கவனம் செலுத்திய அரங்கம் அறக்கட்டளை, 13 ஆம் நூற்றாண்டின் தமிழ்நாட்டின் ஒரு சில கோவிலின் நடைமுறையில் உள்ள சடங்கு நாடக பாரம்பரியமான"கைசிகி நாடகம்" என்பதைப் புதுப்பித்துள்ளது. 50 ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு, நவம்பர் 1999 இல் தமிழ்நாட்டின் திருகுருங்குடியில் உள்ள புகழ்பெற்ற விஷ்ணு ஆலயத்தில் அதன் முதல் மறுமலர்ச்சி நிகழ்ச்சியைக் கொண்டிருந்தது. தற்போதும் மறுமலர்ச்சி பணிகள் தொடர்கின்றன. கிட்டத்தட்ட அழிந்துபோன 10 ஆம் நூற்றாண்டில் மூன்று தென்னிந்திய விஷ்ணு கோயில்களில் தமிழ் கோயில் பூசிகளில் கடைப்பிடிக்கும் விரிவான மைம் மற்றும் இயக்க பாணியை ஆராய்ச்சி செய்தும் மற்றும் ஆவணப் படுத்தியும் தனது நடன-கலை சொற்களஞ்சியத்தில் மதிப்புமிக்க ஆராய்ச்சியை இணைத்து வருகிறார்.[9]
2007 ஆம் ஆண்டில், கனடாவைச் சேர்ந்த நடனக் கலைஞரும், நடன இயக்குனருமான ஹரி கிருட்டிணனுடன் இணைந்து நியூ யார்க்கின் ஜாய்ஸ் சோஹோவில் "7 கிரேஸ்" என்ற தனது தனி நிகழ்ச்சியை நடத்தினார்.[10] இவர் 40 ஆண்டுகளாக 15 நாடுகளில் தனது நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் (2000), பாய்ஸ் (2003) ஆகிய தமிழ்த் திரைப்படங்களில் நடித்தும் இருக்கிறார்.