அன்பே ஆருயிரே | |
---|---|
![]() | |
இயக்கம் | எஸ். ஜே. சூர்யா |
தயாரிப்பு | வி.ரவிச்சந்திரன் |
கதை | எஸ். ஜே. சூர்யா |
இசை | ஏ. ஆர். ரகுமான் |
நடிப்பு | எஸ். ஜே. சூர்யா நிலா |
விநியோகம் | ஆஸ்கர் வி ரவிச்சந்திரன் |
வெளியீடு | 2005 |
ஓட்டம் | 165 நிமிடங்கள் |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | ரூபாய். 9 கோடி ($2 மில்லியன்) |
அன்பே ஆருயிரே திரைப்படம் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும்.எஸ். ஜே. சூர்யாவின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தின் கதாநாயகனாக படத்தின் இயக்குநரே நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.[1][2][3]
கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
காதலியான மதுவுடன் வாழும் சிவா காதலியிடம் பலமுறை சண்டைகள் செய்து கொள்கின்றார்.பின் அவருடன் அன்புடன் இருகின்றார்.திடீரென மது தனக்கு நெடுநாட்களாக இருந்த ஆசையான புதிதாக ஒரு உணவு விடுதியைக் கட்டி எழுப்புவதே என அவர் காதலனிடம் கூறுகின்றார்.ஆனால் இவரின் புதிய சிநேகிதனாக சேர்ந்திருப்பவரின் யோசனைகள் மூலமே இவர் அவ்வாறு கூறுகின்றார் என சந்தேகத்திற்கு உள்ளாகும் சிவா மதுவிடம் இருந்து பிரிந்து செல்கின்றார்.இருவரும் பின்னைய காலங்களில் அவர்களுடைய நல்ல மனம் கொண்ட இருவரின் ஆவிகளாலும் சேர்க்கப்படுகின்றனர்.