அபுல் பசல் | |
---|---|
சிட்டகாங் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் | |
பதவியில் 9 ஏப்ரல் 1973 – 27 நவம்பர் 1975 | |
முன்னையவர் | இன்னாசு அலி |
பின்னவர் | அப்துல் கரீம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சத்கானியா உபாசிலா, சிட்டகாங், வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியா | 1 சூலை 1903
இறப்பு | 4 மே 1983 சிட்டகாங், வங்காளதேசம் | (அகவை 79)
தேசியம் | வங்காளதேசத்தவர் |
பிள்ளைகள் | அபுல் மொமென் |
கல்வி | வங்காள இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் |
முன்னாள் மாணவர் | |
பணி | கல்வியாளர், எழுத்தாளர் |
அபுல் பசல் (Abul Fazal) (1 ஜூலை 1903-4 மே 1983)[1] வங்காளதேச எழுத்தாளரும் மற்றும் கல்வியாளரும் ஆவார்.[2] இவர் சிட்டகாங் பல்கலைக்கழகத்தின் 4 வது துணைவேந்தராக பணியாற்றினார்.[3] இவருக்கு 1962 இல் பங்களா அகாடமி இலக்கிய விருதும் மற்றும் 2012 இல் சுதந்திர தின விருதும் (மரணத்திற்குப் பின்) வழங்கப்பட்டது.[1][4]
1903 ஆம் ஆண்டு சிட்டகாங் மாவட்டத்தில் உள்ள சத்கானியா உபாசிலாவில் சிட்டகாங் ஜேம் மஸ்ஜித் இமாமாக இருந்த மௌல்வி பஸ்லுர் ரகுமானுக்கு மகனாகப் பிறந்தார். இவர், டாக்கா பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். [1] இவர் 1940 இல் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் வங்காள மொழி மற்றும் இலக்கியத்தில் முதுகலைத் தேர்ச்சி பெற்றார் [1]
பசல், இமாமாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். ஆசிரியராகப் பல பள்ளிகளில் கற்பித்தார். 1941 இல், இவர் கிருஷ்ணாநகர் கல்லூரி மற்றும் பின்னர் சிட்டகாங் கல்லூரியின் பேராசிரியரானார். 1973 முதல் 1975 வரை சிட்டகாங் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றினார் [3]
பசல் 1975-23 ஜூன் 1977 இல் வங்காளதேச அரசாங்கத்தின் ஆலோசனைக் குழுவின் கல்வி மற்றும் கலாச்சாரத்திற்கு பொறுப்பான உறுப்பினராக பணியாற்றினார்
பசல், புதினங்கள், சிறுகதைகள், நாடகங்கள், நினைவுக் குறிப்புகள், பயணங்கள் போன்ற பல்வேறு தலைப்புகளில் எழுதினார். இவர் மதத்தைப் பற்றியும் எழுதியுள்ளார். மாதிர் பிருதிபி (1940), பிசித்ரா கதா (1940), ரேகாசித்ரா (1966) மற்றும் டர்டினர் டின்லிபி (1972) ஆகியவை அவரது எழுத்துக்களில் சில.