அப்காசியாவின் பொருளாதாரம் (ஆங்கிலம்:Economy of Abkhazia) உருசியாவின் பொருளாதரத்துடன் பெரிதும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது மற்றும் உருசிய ரூபிளை அதன் நாணயமாகப் பயன்படுத்துகிறது. 2008 தெற்கு ஒசேசியா போருக்குப் பின்னர் அப்காசியா ஒரு சுமாரான பொருளாதார உயர்வை கொண்டுள்ளது மற்றும் அப்காசியாவின் சுதந்திரத்தை உருசியா தொடர்ந்து அங்கீகரித்தது. அப்காசியாவின் மாநில வரவுசெலவுத் திட்டத்தில் பாதி உருசியாவின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படுகிறது.[1]
சுற்றுலா ஒரு முக்கிய தொழிலாகும். மேலும், அப்காசிய அதிகாரிகளின் கூற்றுப்படி, 2007 இல் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் சுற்றுலாப் பயணிகள் (முக்கியமாக உருசியாவிலிருந்து) அப்காசியாவுக்கு வந்துள்ளனர். அப்காசியாவும் உருசியாவும் விசா இல்லாத பயண ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதால், உருசிய கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் அப்காசியாவிற்குள் நுழைய விசா தேவையில்லை. ஐரோப்பிய ஒன்றிய கடவுச்சீட்டுகளை வைத்திருப்பவர்களுக்கு சுகுமியில் உள்ள வெளியுறவு அமைச்சகம் நுழைவு அனுமதி கடிதம் வழங்குகிறது .[2]
அப்காசியாவின் வளமான நிலங்களில் தேயிலை, புகையிலை, ஒயின் மற்றும் பழங்கள் (குறிப்பாக ஆரஞ்சு ) உள்ளிட்ட விவசாய பொருட்கள் ஏராளமாக விளைகின்றன. அப்காசியாவிற்கும் சோர்சியாவிற்கும் இடையில் இங்குரி ஆற்றில் அமைந்துள்ள இங்குரி நீர்மின்சார நிலையத்தால் மின்சாரம் பெரும்பாலும் வழங்கப்படுகிறது மற்றும் இது அப்காசியர் மற்றும் சோர்சியர்களால் கூட்டாக இயக்கப்படுகிறது.
அப்காசிய அதிகாரிகளின் கூற்றுப்படி, 2006 ஆம் ஆண்டில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகள் முறையே 627.2 மற்றும் 3,270.2 மில்லியன் ரூபிள் ஆகும் (சுமார் 22 மற்றும் 117 மில்லியன். அமெரிக்க டாலர்கள்) ஜூலை 2012 இல், மாநில சுங்கக் குழு முதன்முறையாக வர்த்தக புள்ளி விவரங்களை வெளியிட்டது. 2012 ஆம் ஆண்டின் முதல் பாதியில், இறக்குமதி 6.748 ஆகவும், ஏற்றுமதி 1.48 பில்லியன் ரூபிளாகவும் இருந்தது, இதன் விளைவாக 4.6518 பில்லியன் ரூபிள் வர்த்தக பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில், இறக்குமதி கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகவே இருந்தன (0.2% குறைந்து), ஏற்றுமதி 25.8% உயர்ந்துள்ளது. அப்காசியாவின் முக்கிய வர்த்தக பங்காளிகள் உருசியா (64%), துருக்கி (18%), பால்டிக் நாடுகள் (5%), மால்தோவா (2%), ஜெர்மனி (2%), உக்ரைன் (1%) மற்றும் சீனா (1%) ஆகிய நாடுகள் ஆகும்.
உருசிய தொழில் முனைவோர் மற்றும் சில உருசிய நகராட்சிகள் அப்காசியாவில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளன. மாஸ்கோவின் முன்னாள் மேயர் எயூரி லுசுகோவ் (1992-2010 பதவியில்), மாஸ்கோவிற்கும் அப்காசியாவிற்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு மாஸ்கோ நகராட்சியும் இதில் இணைந்தது.[3] 2014 குளிர்கால ஒலிம்பிக்கை நடத்தவுள்ள நகரத்தில் சோச்சியில் ஒலிம்பிக் கட்டுமானத் திட்டங்களை அப்காசியன் மற்றும் உருசிய அதிகாரிகள் இருவரும் அறிவித்தனர். இது அப்காசியாவின் வசதிகள் மற்றும் வளங்களை சுரண்டுவதற்கான நோக்கங்களை கொண்டிருந்தது. இருப்பினும், சோர்சிய அரசாங்கம் இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிராக எச்சரித்தது.[4] மற்றும் உருசிய நிறுவனங்கள் மற்றும் அப்காசியாவில் சொத்துக்களை வாங்கும் தனிநபர்களின் கணக்குகளை மூடுமாறு வெளிநாட்டு வங்கிகளைக் கேட்க இருப்பதாகவும் அச்சுறுத்தியது.[5]
1996 ஆம் ஆண்டில் அப்காசியா மீது சுமத்தப்பட்ட விடுதலை பெற்ற நாடுகளின் பொதுநலவாயத்தின் பொருளாதாரத் தடைகள் முழுமையாக நடைமுறையில் உள்ளன, இருப்பினும் ரஷ்யா 6 மார்ச் 2008 அன்று இனி அத்திட்டங்களில் பங்கேற்கப் போவதில்லை என்றும், அவை "காலாவதியானவை" என்றும் அறிவித்து, பிராந்தியத்தின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு இடையூறு விளைவித்து, மேலும் அப்காசியாவின் மக்களுக்கு நியாயமற்ற கஷ்டங்களை ஏற்படுத்தியது.[6]
அமெரிக்காவை தளமாகக் கொண்ட "பிரீடம் ஹவுஸ்" என்ற நிறுவனத்தின் 2007 ஆம் ஆண்டின் அறிக்கையின்படி, பரவலான ஊழல், பொருளாதாரத்தின் பெரிய பிரிவுகளில் குற்றவியல் அமைப்புகளின் கட்டுப்பாடு மற்றும் போரின் தொடர்ச்சியான விளைவுகள் காரணமாக இப்பகுதி கணிசமான பொருளாதாரச் சிக்கல்களை சந்தித்து வருகிறது. என்று கூறுகிறது [7]