அய்யாலசோமயாஜுலா லலிதா (எ லலிதா) ஆங்கிலம்: Ayyālacōmayājula Lalitā) (27 ஆகஸ்ட் 1919 - 12 அக்டோபர் 1979) இந்தியாவின் முதல் பெண் பொறியாளர் ஆவார்.[1]
அய்யாலசோமயாஜுல லலிதா 27 ஆகஸ்ட் 1919 ஆம் தேதியன்று மெட்ராஸில் (இப்போது சென்னை ) தெலுங்கு பேசும் குடும்பத்தில் பிறந்தார் [2][3] அவர் 15 வயதில் திருமணம் செய்து கொண்டார். 1937 ஆம் ஆண்டில் இவரது மகள் சியாமளா பிறந்தார்.[4] நான்கு மாதங்களுக்குப் பிறகு இவரது கணவர் இறந்துவிட்டார். அவரது தந்தை, பப்பு சுப்பா ராவ், அவர் பேராசிரியராக இருந்த கிண்டியில் உள்ள அனைத்து ஆண் பொறியியல் கல்லூரியில் (CEG) இடைநிலைக் கல்வியை முடித்து பொறியியல் படிக்க வேண்டும் என்ற அவரது விருப்பத்தை ஆதரித்தார்.[4][5] கிண்டி பொறியியல் கல்லூரியில், லலிதா மற்ற பெண் பொறியாளர்களான பிகே திரேசியா மற்றும் லீலாம்மா கோஷி (நீ ஜார்ஜ்) ஆகியோருடன் சேர்ந்து படித்தார்.[5] அவரது மகளின் கூற்றுப்படி, கல்லூரி நிர்வாகமும் மற்ற மாணவர்களும் லலிதாவை ஆதரித்தனர். "மக்கள் நினைப்பதற்கு மாறாக, அம்மா கல்லூரி மாணவர்கள் மிகவும் ஆதரவாக இருந்தனர். நூற்றுக்கணக்கான ஆண் மாணவர்களைக் கொண்ட கல்லூரியில் இவர் ஒரே பெண் ஆவார். ஆனால் இவரை யாரும் தொல்லைப் படுத்தவில்லை. உணரவில்லை. இது பாராட்டத் தக்கது. அதிகாரிகள் இவருக்கு தனி விடுதியினை ஏற்பாடு செய்தனர். "அம்மா கல்லூரியை முடிக்கும் போது நான் என் மாமாவுடன் வசித்து வந்தேன், அவர் ஒவ்வொரு வார இறுதியிலும் என்னை சந்திப்பார்" மகள் கூறியுள்ளார்.[6] லலிதா 1943 ஆம் ஆண்டு மின் பொறியியலில் (ஆங்கிலம்: Electrical engineering) பட்டம் பெற்றார் - இந்தியாவின் முதல் பெண் பொறியியலாளராகவும் ஆனார். அவர் தனது செய்முறைப் பயிற்சியை ஜமால்பூர் ரயில்வே பணிமனையில் ஒரு வருட பயிற்சியுடன் முடித்தார், இது ஒரு பெரிய அளவில் பழுது பார்த்து முழுமையாக செப்பனிடும் வசதி கொண்ட பணிமனை ஆகும்.[4]
பட்டப்படிப்புக்குப் பிறகு, லலிதா சிம்லாவில் உள்ள மத்திய தரநிலை அமைப்பில் பணிபுரிந்தார்., அவரது தந்தையின் புகைபிடிக்காத அடுப்பு மற்றும் ஜெலெக்ட்ரோமோனியம் (ஒரு மின் இசைக்கருவி) ஆகிய ஆய்வுக்கு உதவினார்.[5]
இந்திய அரசின் மின்சார ஆணையர் அலுவலகத்தில் தொழில்நுட்ப உதவியாளராக ஆவதற்கு முன்பு, கிழக்கு இந்திய ரயில்வேயின் மின் துறையில் ஓராண்டு நடைமுறைப் பயிற்சியை இவர் மேற்கொண்டார்.[7] இதைத் தொடர்ந்து, 1948 ஆம் ஆண்டு, லலிதா கல்கத்தாவில் உள்ள அசோசியேட்டட் எலக்ட்ரிக்கல் இண்டஸ்ட்ரீஸ் என்ற பிரித்தானிய நிறுவனத்தில் சேர்ந்தார், இந்தியாவின் மிகப்பெரிய அணையான பக்ரா நங்கல் அணையில் டிரான்ஸ்மிஷன் லைன்கள் மற்றும் துணை மின்நிலைய அமைப்புகளை வடிவமைப்பதில் பணியாற்றினார்.[4][5][7] அவர் 1977 ஆம் ஆண்டில் ஓய்வு பெறுவதற்கு முன்பு [5] முப்பது ஆண்டுகள் AEI யில், (பின்னாளில ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனம் AEI ஐ தன் பொறுப்பில் எடுத்துக்கொண்டது) பணிபுரிந்தார்.
1953 இல் லண்டனின் மின் பொறியாளர்களின் கவுன்சில் (IEE) இவரை ஓர் இணை உறுப்பினராகத் தேர்ந்தெடுத்தது. மேலும் 1966 ஆம் ஆண்டு [4] முழு உறுப்பினராகவும் உயர்த்தியது.
1964 ஆம் ஆண்டு நியூயார்க்கில் நடைபெற்ற பெண் பொறியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் (ICWES) முதல் சர்வதேச மாநாட்டில், இந்தியாவிலிருந்து கலந்து கொண்ட பெண் பொறியியலாளர் லலிதா மட்டுமே.[3][5]
லலிதா 1965 ஆம் ஆண்டு பிரித்தானிய மகளிர் பொறியியல் சங்கத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் [8] மேலும் 1967 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கேம்பிரிட்ஜில் நடைபெற்ற இரண்டாவது சர்வதேச மகளிர் பொறியாளர்கள் மற்றும் அறிவியலாளர்களின் (ICWES) மாநாட்டின் அமைப்புக் குழுக்களின் இந்தியப் பிரதிநிதியாகவும் பணியாற்றினார்.[8]
கணவர் இறந்த பிறகு லலிதா மறுமணம் செய்து கொள்ளவில்லை. அறிவியல் பாடங்களில் பட்டம் பெற்று கணித ஆசிரியையான மகள் சியாமளாவை வளர்ப்பதற்கு உதவிய மைத்துனியுடன் தன் வாழ்நாளின் பெரும்பகுதி கழித்தார்.[5]
1979 ஆம் ஆண்டு , லலிதா 60 ஆம் வயதில் மூளை அனீரிஸம் காரணமாக இறந்தார்.[4][5]
{{cite book}}
: CS1 maint: multiple names: authors list (link) CS1 maint: numeric names: authors list (link)