ஆசிரிய முகமூடி அகற்றி  |
நூலாசிரியர் | ச. மாடசாமி |
---|
நாடு | இந்தியா |
---|
மொழி | தமிழ் மொழி |
---|
வெளியீட்டாளர் | அறிவியல் வெளியீடு |
---|
வெளியிடப்பட்ட நாள் | மே, 2014 |
---|
பக்கங்கள் | 72 |
---|
ஆசிரிய முகமூடி அகற்றி, பிராங்க் மக்கோர்டு எழுதிய "Teacher Man" என்ற நூலின் வாசிப்பு அனுபவத்தால் ச. மாடசாமி எழுதிய நூல் இது.
மக்கோர்ட்டின் கூற்றுகளாக இந்நூலிலுள்ள சில வரிகள்[1]:
- ”தாமதமாய் மலர்ந்தவன்” என்று மக்கோர்ட் தன்னைப் பற்றி சொல்லிக் கொள்வார்.
- தம் பணிக்காலம் முழுவதும் ‘ஆசிரிய முகமூடி’யைக் கழற்ற ஓயாமல் முயன்றவர் மக்கோர்ட்.பணி ஒய்வு பெற்றதும் ”முகமூடி அநேகமாக கழன்று விட்டது. இப்போது என்னால் மூச்சு விட முடிகிறது” என்று எழுதினார் மக்கோர்ட்.
- "நீ அவர்களைப் பார்த்துக் கத்தினாலோ, திட்டினாலோ அவர்களை இழக்கிறாய். உன் சத்தத்துக்குப் பிறகு, சலனமற்று மௌனமாய் அவர்கள் வகுப்பறையில் உட்கார்ந்திருப்பது உன்னைத்திருப்பி அடிப்பது போல. வகுப்பறை அத்துடன் முடிந்துவிட்டது."
- "மாணவர்களைக் கட்டுப்பாட்டில் வைக்க ஆசிரியரிடம் என்ன இருக்கிறது? பிரம்பா? துப்பாக்கியா? ஆசிரியரிடம் இருப்பது வாய் மட்டுமே"
- ”ஒவ்வொரு வருடம் முடியும் போதும் அந்த வகுப்பறையில் நிச்சயம் ஒருவனாவது ஏதோ சிலவற்றைக் கற்றுக் கொள்கிறான்.அந்த ஒருவன் நான்தான்”.
- ↑ ச.மாடசாமி (மே 2014). ஆசிரிய முகமூடி அகற்றி. சென்னை: அறிவியல் வெளியீடு. p. 72.
{{cite book}}
: CS1 maint: year (link)