லான்ஸ் நாயக் ஆல்பர்ட் எக்கா | |
---|---|
![]() இந்திய அஞ்சல் தலையில் ஆல்பர்ட் எக்காவின் படம், ஆண்டு 2000 | |
பிறப்பு | ஜாரி, குல்மா மாவட்டம், பிகார் மாகாணம், பிரித்தானிய இந்தியா | 27 திசம்பர் 1942
இறப்பு | 3 திசம்பர் 1971 பிரம்மன்பரியா மாவட்டம், வங்களாதேசம் | (அகவை 28)
சார்பு | ![]() |
சேவை/ | ![]() |
சேவைக்காலம் | 1962–1971 |
தரம் | ![]() |
படைப்பிரிவு | 14-வது இந்தியக் காவல் படையணி (Brigade Of The Guards) |
போர்கள்/யுத்தங்கள் | இந்திய-பாகிஸ்தான் போர், 1971 |
விருதுகள் | ![]() |
துணை(கள்) | பாலம்டைன் எக்கா |
லான்ஸ் நாயக் ஆல்பர்ட் எக்கா (Albert Ekka), PVC (27 டிசம்பர் 1942 – 3 டிசம்பர் 1971) இந்திய இராணுவத்தில் சிப்பாயாயக் சேர்ந்து, லான்ஸ் நாயக் பதவி உயர்வு பெற்றவர். வங்காளதேச விடுதலைக்காக நடைபெற்ற 1971 இந்திய-பாகிஸ்தான் போரின் போது, பிரம்மன்பரியா மாவட்டத்தில் பாகிஸ்தான் படைவீரர்களை எதிர்த்து வீர தீரமாக போராடி 3 டிசம்பர் 1971 அன்று போர்க்களத்தில் வீரமரணமடைந்தார். இவரது மறைவிற்கு இவரது போர் தீரத்தை பாராட்டி இந்தியக் குடியரசுத் தலைவர் 1972-ஆம் ஆண்டில் பரம் வீர் சக்கரம் விருது வழங்கப்பட்டது.[1][2]