விமானப் படைத் தளவாய் ஆஸ்பி மெர்வான் இஞ்சினியர் சிறப்பு பறக்கும் விருது ( ஐக்கிய இராச்சியம் ) | |
---|---|
![]() ஆஸ்பி மெர்வான் இஞ்சினியர் | |
5வதுவான்படைத் தலைவர் | |
பதவியில் 1 திசம்பர் 1960 – 31 ஜூலை 1964 | |
குடியரசுத் தலைவர் | இராசேந்திர பிரசாத் |
பிரதமர் | ஜவகர்லால் நேரு |
முன்னையவர் | சுப்ரத்தோ முகர்ஜி |
பின்னவர் | அர்ஜன் சிங் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | லாகூர், பிரித்தானிய இந்தியா. | 15 திசம்பர் 1912
இறப்பு | 1 மே 2002 மும்பை, இந்தியா | (அகவை 89)
உறவுகள் | மினூ மெர்வான் இஞ்சினியர் (சகோதரர்) |
முன்னாள் மாணவர் | அரச கழக வான்படை பயிற்சிப் பள்ளி, கிரான்வெல் |
இராணுவ சேவை | |
பற்றிணைப்பு | ![]() ![]() |
கிளை/சேவை | ![]() ![]() |
சேவை ஆண்டுகள் | 1933-1964 |
தரம் | ![]() |
போர்கள்/யுத்தங்கள் | வாசிரிஸ்தான் முற்றுகை (1936–39)]] இந்திய-பாகிஸ்தான் போர், 1947 - 1948 கோவா படையெடுப்பு இந்திய சீனப் போர் |
விமானப் படைத் தளவாய் ஆஸ்பி மெர்வான் இஞ்சினியர் (Aspy Merwan Engineer; 15 திசம்பர் 1912 – 1 மே 2002) இந்திய வான்படையில் ஓர் அதிகாரியாக இருந்தார். இந்திய விமானப்படையின் முதல் இந்தியத் தளபதியான சுப்ரத்தோ முகர்ஜிக்குப் பின்னும் அர்ஜன் சிங்குக்கு முன்னதாகவும் இவர் சுதந்திர இந்தியாவின் விமானப்படைத் தலைவரானார்.
இவரது பறக்கும் வாழ்க்கை இவரது 17 வயதில் 1930 இல் தொடங்கியது. பிரித்தானிய இந்தியாவின் கராச்சியிலிருந்து இங்கிலாந்தின் குரோய்டன் விமான நிலையத்திற்கு தனது நண்பர் இராம்நாத் சாவ்லாவுடன் இணை விமானியாக விமானத்தில் சென்றார். இவ்வாறு பறந்த முதல் இந்தியராக இவர்கள் இருந்தனர். சிறிது காலத்திற்குப் பிறகு, மூன்றாம் ஆகா கான் நடத்திய போட்டியில் இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்குமிடையேயான தனி பயணத்தையும் ஒரு மாத காலத்திற்குள் பறந்த முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார்.
இவர், பின்னர் இந்திய வான்படையில் சேர்ந்தார். அரச கழகத்தின் கிரான்வெல் விமானப் படை நிலையத்தில் பயிற்சி பெற்றார். வடமேற்கு எல்லைப்புற மாகாணங்களிலும், பர்மாவிலும் நடைபெற்ற போர் நடவடிக்கைகளில் கலந்து கொண்டார். இதன் விளைவாக இங்கிலாந்தின் சிறப்பு பறக்கும் விருது வழங்கப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் முடிவில் இவர் வானூர்திச் சீறகத் தலைவரானார்.
ஓய்வுக்குப் பிறகு, இவர் ஈரானுக்கான இந்தியத் தூதராக பணியாற்றினார். பின்னர், கலிபோர்னியாவில் சில காலம் இருந்த பின்னர் மும்பையில்]] தனது கடைசி நாட்களை கழித்தார் .
இவர், ஆஸ்பி மெர்வான் இரானி என்ற இயற்பெயருடன் 15 திசம்பர் 1912 அன்று பிரித்தானிய இந்தியாவின் லாகூரில் மெகர்வான் இரானி - மேனெக்பாய் ஆகியோருக்கு பிறந்தார். மெகர்வான் வடமேற்கு இரயில்வேயின் பிரிவு பொறியாளராக இருந்தார்.[1] இயக்கவியலில் இவர் கொண்டிருந்த ஆர்வம் காரணமாக இவரது நண்பர்கள் இவரை இஞ்சினியர் (பொறியாளர்) என்று அழைக்க ஆரம்பித்தனர்.[2][3][4] [5] இரண்டு பெண்களும் ஆறு ஆண்களும் என இவருடன் பிறந்த எட்டு உடன்பிறப்புகளில் ஆஸ்பி மூத்தவர். இவரது சகோதரர்களான மினூ, ஜுங்கூ, ரோனி ஆகியோரும் இந்திய விமானப்படையில் சேர்ந்தனர். மற்றொரு சகோதரர் ஹோமி இந்திய ராணுவத்தில் சேர்ந்தார். ஆஸ்பி, மினூ , ரோனி ஆகியோர் இலண்டனின் சிறப்பு பறக்கும் விருது பெற்றவர்களாக இருந்தனர். இது ஒரு தனித்துவமான சாதனையாகும். மூன்று சகோதரர்களும் துணிச்சலான விருதுகளால் அலங்கரிக்கப்பட்டனர்.[1][6]
தனது 7 வயதில் பாக்கித்தானின் சிந்து மாகாணத்தின் ஐதராபாத்திலுள்ள தனது வீட்டின் அருகே உள்ள மைதானத்தில் விமானம் ஒன்று தரையிறங்குவதை கண்டு தான் விமானியாக கனவு கண்டதாக நினைவு கூர்ந்தார்.[6]
பஞ்ச்கனி, பில்லிமோரியா பார்சி பள்ளியிலும்[6], கராச்சியிலுள்ள டி.ஜே அறிவியல் கல்லூரி ஆகியவற்றில் தனது ஆரம்பக் கல்வியை முடித்தார்.[7] இவரது 17 வது பிறந்தநாளில், இவரது தந்தை இவருக்கு ஒரு பழைய விமானத்தை பரிசாக வழங்கினார். பின்னர், மூன்று மாதங்களுக்கும் குறைவான பயிற்சிக்குப் பிறகு, கராச்சி வான் சங்கத்திலிருந்து தனது பறக்கும் உரிமத்தைப் பெற்றார்.[6]
நவம்பர் 1929 இல், முஸ்லிம்களின் இஸ்மாயிலை பிரிவின் 48 வது இமாம் மூன்றாம் ஆகா கான் [8] ஒரு மாத காலத்திற்குள் இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் இடையில் தனியாக பறக்கக்கூடிய முதல் இந்தியருக்கு 500 டாலர் பரிசு அறிவித்தார். [9]
இணை விமானியாக இவரும் இவரது நண்பர் ஆர். என். சாவ்லாவும் மார்ச் 1930இல் இங்கிலாந்துக்கு ஒரு விமானத்தில் புறப்பட்டனர். அந்த நேரத்தில் வானொலி தகவல் தொடர்பு அல்லது வான் போக்குவரத்து கட்டுப்பாடு இல்லாதிருந்தது. மார்ச் 21, 1930 அன்று, இவர்கள் குரோய்டன் விமான நிலையத்தைச் சென்றடைந்தனர். அங்கு இலண்டன் நகரின் நகரத் தந்தையும் பத்திரிகைகளும் மாலைகளுடன் இவர்களை வரவேற்றனர்.[6][10]
ஆகஸ்ட் 15, 1947 இல், இந்திய பிரிவினைக்குப் இந்திய ஒன்றியத்தின் புதிய விமானத் தலைமையகம் உருவாக்கப்பட்டது. இவர், விமானத் தானை முதல்வர் பதவிக்கு உயர்த்தப்பட்டார்.[11] இந்திய விமானப்படையின் சொத்துக்கள் (இராணுவத்தின் மற்ற கிளைகளைப் போல) இந்தியாவின் டொமினியர்களுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பிரிக்கப்பட வேண்டியிருந்தது. இந்த குழுவின் விமானப்படைப் பகுதிக்கு சுப்ரோதோ முகர்ஜியும் இவரும் தலைமை தாங்கினர்.[5]
வானூர்திச் சீறகத் தலைவர் என்ற முறையில், 1947 ஆம் ஆண்டு இந்திய-பாகிஸ்தான் போரின் போது [[சம்மு காசுமீர் மாநிலம்| ஜம்மு -காஷ்மீரில் உள்ள துருப்புக்களின் குழுவை வழிநடத்தினார். [5]
1952 ஆம் ஆண்டில், பொறியாளர் விமானப் பணியாளர்களின் துணைத் தலைவராகவும், துணை விமானத் தளபதியாகவும் ஆனார்.[12] இவர் அக்டோபர் 1, 1954இல் விமானத் துணைத்தளவாய் பதவிக்கு உயர்த்தப்பட்டார். நவம்பர் 1954 இல், இவர் இந்தோனேசியாவுக்கு ஒரு நல்லெண்ண பயணத்தில் விமானப்படையை வழிநடத்தினார்.[13] இவர், 1958இல் மூன்று வருட காலத்திற்கு இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட்டுக்கு (எச்ஏஎல்) நியமிக்கப்பட்டார். மே 28 அன்று, அதன் பொது மேலாளராக பொறுப்பேற்றார். 23 மே 1959 இல், விமானப் படைத் தளவாய் பதவிக்கு உயர்த்தப்பட்ட இரண்டாவது இந்தியரானார்.[14]
சுப்ரதோ முகர்ஜியின் அகால மறைவுக்குப் பிறகு, அடுத்த வான்படைத் தலைவராக நியமிக்கப்பட்டார். 1 திசம்பர் 1960 இல், இவர் விமானப் பணியாளர்களின் இரண்டாவது இந்தியத் தலைவராக பொறுப்பேற்றார்.[8] [15]
இவர் ஜூலை 31, 1964 அன்று இந்திய வான்படையிலிருந்து ஓய்வு பெற்றார். பின்னர், ஈரானுக்கான இந்தியாவின் தூதராக பணியாற்றினார். 1990 ஆம் ஆண்டில், இவர் தெற்கு கலிபோர்னியாவிற்குச் சென்று அங்கு கலிபோர்னியா சரதுச மையத்தை நிறுவினார்.[6]
ஆஸ்பி மெர்வான் இஞ்சினியர்1 மே 2002 அன்று மும்பையில் இறந்தார்.[6]