இந்தியாவில் மத்தியில் ஒன்றிய அரசும் மாநிலத்தில் மாநில அரசுகளுமாக இரண்டு அரசு இருக்கும் கூட்டாட்சி (federal system) நடைமுறையில் உள்ளது. ஒன்றிய அரசும் மாநில அரசும் அதிகாரத்தையும், அவ்வதிகாரத்தைச் செயல்படுத்துவதற்கான வளத்தையும் பகிர்ந்து கொள்ளும். ஒரு சில அதிகாரங்களை இரண்டும் கூட்டாகச் சேர்ந்து செயல்படுத்துகிறது.
கூட்டாட்சி முறையின் அம்சங்கள்:
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு ஒன்று கூறுவது:
இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஒரு கூட்டாட்சிக்குத் தேவையான அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி ஒன்றிய, மாநில அரசுகள் என்ற இரு அமைப்புகள் எற்படுத்தப்பட்டுள்ளது. [4] இவைகளுக்கிடையே அதிகாரங்களும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசைப் பொறுத்தவரை தமக்கு அளிக்கப்பட்ட துறைகளில் முழு அதிகாரம் செலுத்திக் கொள்ளலாம். அது போலவே மாநில அரசும் தமது துறைகளில் முழு அதிகாரம் செலுத்திக்கொள்ளலாம். இந்திய அரசியலமைப்புச் சட்டம் எழுத்து வடிவிலானது. அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவுகளை மாற்றுவது எளிதானது அல்ல. மாற்றம் தேவைப்பட்டால் பெரும்பான்மை மாநில அரசுகளின் ஒப்புதலும் தேவைப்படும். ஒன்றிய, மாநில அரசுகளுக்கிடையேயோ அல்லது மாநில அரசுகளுக்கிடையேயோ கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அவைகளைத் தீர்த்து வைப்பதற்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம் உச்ச நீதிமன்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தின் தன்மையைப் பாதுகாப்பதும், பிரிவுகளைச் செயல் படுத்த உதவுவதும் உச்ச நீதிமன்றத்தின் பொறுப்பு என இந்திய அரசியலமைப்புச்சட்டம் கூறுகின்றது.[2]
இந்திய அரசியலமைப்புச் சட்டம் உண்மையான கூட்டாட்சி அல்ல அது கூட்டாட்சி போன்றது ( Quasi Federal ) என்று சில K.C வியார் போன்ற அறிஞர்கள் கூறுவதுண்டு.[2] சில நேர்வுகளில் ஒன்றிய அரசு, மாநிலஅரசின் அதிகாரங்களில் தலையிட வாய்ப்பு உள்ளது என்றும் ஆதலால் மாநில அரசுகள் ஒன்றிய அரசிற்கு சமமானவை அல்ல என்றும் அவைகள் ஒன்றிய அரசின் கீழுள்ள அரசுகள் போல செயல்பட வேண்டிவருகின்றது என்றும் அதனால் இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஒரு முழுமையான கூட்டாட்சி தத்துவத்தை எதிரொளிப்பதில்லை என்றும் கூறுகின்றனர். இதற்கு ஆதாரமாக கீழ்க்கண்டவாதத்தை முன் வைக்கின்றனர்
ஒவ்வொரு மாநிலத்திற்கும் குடியரசுத் தலைவர் ஆளுநரை நியமிப்பார். ஆளுநர் குடியரசுத் தலைவருக்குப் பதிலளிக்கும் பொறுப்புள்ளவர். அவர் பெயரளவிலேயே அரசின் தலைவராக இருந்தாலும் மாநில அமைச்சரவையின் பரிந்துரைக்குக் கட்டுப்பட்டவர். ஒருசில பிரிவுகளின் படி ஆளுநர் மாநில அரசின் சட்டங்களை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும். குடியரசுத் தலைவர் இவைகளை மறுப்பதற்கும் அதிகாரம் உண்டு. (பிரிவு 200, 288 (2)) [3]
பாராளுமன்றத்தின் மேலவை, மூன்றில் இரண்டு பங்கு பெருமான்மையுடன் தேசிய நலனைக் கருத்தில் கொண்டு மாநிலங்கள் அதிகார வரம்பில் உள்ள ஒரு பொருளின் மீது சட்டமியற்ற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினால், பாராளுமன்றம் அவ்வாறு சட்டமியற்ற முடியும். (பிரிவு249)[3]
பாராளுமன்றம் புதிய மாநிலங்களைத் தோற்றுவிக்கலாம். மாநிலங்களின் எல்லைகளை மாற்றியமைக்கலாம். (பிரிவு 3)[3] ஒரு மாநிலத்தின் இருப்புத் தன்மை பாராளுமன்றத்தின் விருப்பத்தைப் பொறுத்தது.
அரசியலமைப்புச் சட்டம் மூன்று வகையான அவசர நிலைகளைக் குறிப்பிடுகிறது. அவை:
அவசர நிலை பிரகடனப் படுத்தப்பட்டால் மாநில அரசின் அதிகார வரம்பில் உள்ள பொருள்கள் மீது பாராளுமன்றம் சட்டமியற்றாலம். மாநிலத்தின் நிர்வாகம் எப்படிச் செயல்பட வேண்டும் என்று மைய அரசு அறிவுறுத்தலாம். தேவைப்பட்டால் குடியரசுத் தலைவர் மாநில அரசுகளையும் மாநில சட்ட மன்றங்களையும் கலைத்தும் ஆணையிடலாம்.[2]
{{cite web}}
: Unknown parameter |=
ignored (help); Unknown parameter |பார்த்த நாள்=
ignored (help)