இந்தியாவில் தேனீ வளர்ப்பது (Beekeeping in India) குறித்த செய்திகள் பண்டைய வேதங்கள் மற்றும் பௌத்த நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. மத்தியப் பிரதேசத்தில் காணப்படும் இடைக் கற்காலத்தின் பாறை ஓவியங்கள் தேன் சேகரிப்பு நடவடிக்கைகளைச் சித்தரிக்கின்றன. இருப்பினும் அறிவியல் ரீதியாகத் தேனீ வளர்ப்பு 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்கப்பட்டன. தேனீக்களை அடக்கி மற்றும் போரில் பயன்படுத்திய பதிவுகள் 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் காணப்படுகின்றன. இந்தியச் சுதந்திரத்திற்குப் பிறகு, பல்வேறு கிராமப்புற மேம்பாட்டுத் திட்டங்கள் மூலம் தேனீ வளர்ப்பு ஊக்குவிக்கப்பட்டது. இயற்கையான தேன் மற்றும் தேன் மெழுகு உற்பத்திக்கு வணிக ரீதியாக முக்கியமான ஐந்து வகையான தேனீச் சிற்றினங்கள் இந்தியாவில் காணப்படுகின்றன.
இருக்கு வேதம், அதர்வண் வேதம், உபநிடதங்கள், பகவத் கீதை, மார்க்கண்டேய புராணம், ராஜ் நிகண்டு, பாரத சம்ஹிதா, அர்த்தசாஸ்திரம் மற்றும் அமர் கோஷா போன்ற இந்தியாவின் பல்வேறு இந்து வேத நூல்களில் தேனீக்கள், தேன் மற்றும் தேனீ வளர்ப்பு ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன. விநய பிடகம், அபிதம்மபிடகம் மற்றும் ஜாதக கதைகள் போன்ற பல்வேறு பௌத்த நூல்களும் தேனீக்கள் மற்றும் தேனைக் குறித்த செய்திகளைக் குறிப்பிடுகின்றன. வாட்சயனாவின் காமசூத்திரம் பாலியல் இன்பங்களில் குறிப்பிடத்தக்கக் காரணியாகத் தேனைக் குறிப்பிடுகிறது.[1] பிரபலமான காவியமான இராமாயணம் சுக்ரீவனால் வளர்க்கப்பட்ட "மதுபன்" (அதாவது தேன் காடு) பற்றி விவரிக்கிறது. கிருட்டிணனும் இராதையும் சந்திக்கும் இன்றைய மதுராவிற்கு அருகில் ஒரு வித்தியாசமான மதுபன் குறித்து மகாபாரதம் குறிப்பிடுகிறது. இந்தியாவை "தேன் மற்றும் பால் நாடு" ஆக்க தேனீக்களைப் பழக்க/அடக்கக் காடுகள் பயன்படுத்தப்பட்டன.[2]
மத்தியப் பிரதேசம் மற்றும் பச்மாரி பகுதிகளில் பல்வேறு பாறை ஓவியங்கள் இடைக் கற்காலம் மற்றும் பிந்தைய இடைக் கற்காலம் காலத்தைச் சேர்ந்தவை. இந்த ஓவியங்கள் முக்கியமாக ஏபிசு டார்சாட்டா மற்றும் எபிசு செரானா தேனீக்களின் தேனடைகளிலிருந்து காடுகளில் தேன் சேகரிப்பு நடவடிக்கைகளைச் சித்தரிக்கின்றன.[3]
1842-49ல் இன்றைய ஒடிசா மாநிலத்தின் கிழக்குக் கடற்கரையை ஆங்கிலேயர்கள் தாக்கியபோது, கொண்டா பழங்குடியினர் அவர்களுக்கு எதிராகத் தேனீக்களைப் பயன்படுத்தியதாகக் குறிப்பிடப்படுகிறது. ஆனால் தேனீக்களை இவர்கள் பழக்கப் பயன்படுத்தும் நுட்பங்களைப் பற்றி அதிகம் அறியப்படவில்லை.[2] மணிப்பூர் மற்றும் நாகாலாந்தின் மலைப்பாங்கான பகுதிகளில் உள்ள பல்வேறு பழங்குடியினர் தேனீ வளர்ப்புக்கு மரக் கட்டைகள் அல்லது மண் பாண்டங்களைப் பயன்படுத்தினர். ஆனால் தேன் கூடுகளிலிருந்து தேனையெடுக்க கச்சா முறைகள் பயன்படுத்தப்பட்டன. இவை தேனை மெழுகுடன் கலந்து, தேனீக்களைக் கொல்லும் வாய்ப்புக்களையும் கொண்டிருந்தன. மணிப்பூரி பழங்குடியினரால் தேனடையினைத் துளைக்க ஆணி இணைக்கப்பட்ட மூங்கில் பயன்படுத்தப்படுகிறது. இந்த மூங்கில் மூலம் மற்றொரு பீப்பாய்க்குத் தேனைப் பாய்ச்சலாம்.[4]
1880ஆம் ஆண்டில் மேற்கு வங்காளப் பகுதியிலும், பஞ்சாப் மற்றும் குலு பகுதிகளிலும், 1883-84ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஏபிசு செரானா தேனீயினை அறிவியல் முறையில் வளர்க்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியுற்றன. தபால் மற்றும் தந்தி துறையின் பிரித்தானிய அதிகாரியான டக்ளசு எழுதிய தேனீ வளர்ப்பு கையேடு 1884-ல் இந்தியாவில் வெளியிடப்பட்ட முதல் புத்தகமாகும். கேரளாவில் அருட்தந்தை நியூட்டனால், 1911-17ஆம் ஆண்டில் தேனீ வளர்ப்பில் தேன் அறுவடை செய்யவும், 1911-17ஆம் ஆண்டில் கிராமப்புற மக்களுக்குப் பயிற்சி அளிக்கவும் தொடங்கியபோது, இவர் பிரத்யேகமாகத் தேன் கூடு ஒன்றை உருவாக்கி, முதலில் வெற்றிகரமான முயற்சியை மேற்கொண்டார். இந்த வடிவமைப்பு "நியூட்டன் தேன் கூடு" என்று பிரபலமாக அறியப்பட்டது. 1917-ல் திருவிதாங்கூர் பகுதிகளிலும், 1925-ல் மைசூர் பகுதிகளிலும் கணிசமான தேனீ வளர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 1931-ல் சென்னை பிராந்தியங்களிலும், 1933-ல் பஞ்சாபிலும், 1938-ல் உத்தரப்பிரதேசத்திலும் இந்த நடவடிக்கைகள் உத்வேகம் பெற்றன. அகில இந்தியத் தேனீ வளர்ப்போர் சங்கம் 1938-39-ல் உருவாக்கப்பட்டது மற்றும் தேனீ வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம் 1945-ல் பஞ்சாபில் முதன் முதலில் இந்திய வேளாண் ஆராய்ச்சி சபையினால் நிறுவப்பட்டது.[5] 1931-ல் கோயம்புத்தூரில் உள்ள வேளாண்மைக் கல்லூரி (தற்போது தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் ) பாடத்திட்டத்தில் தேனீ வளர்ப்பு சேர்க்கப்பட்டது.[6]
இயற்கையான தேன் மற்றும் தேனீ மெழுகு ஆண்டு உற்பத்தி மூலம்: ஐக்கிய நாடுகள் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு, புள்ளிவிவரம்[7] |
---|
10,000
20,000
30,000
40,000
50,000
60,000
70,000
1993
1994
1995
1996
1997
1998
1999
2000
2001
2002
2002
2004
2005
2006
2007
2008
2009
2010
2011
2012
2013
2014
2015
2016
2017
2018
|
1947ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, தேனீ வளர்ப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்த மகாத்மா காந்தி தனது கிராமப்புற மேம்பாட்டுத் திட்டங்களில் சேர்த்து தேனீ வளர்ப்பினை வலியுறுத்தினார். ஆரம்பத்தில், தேனீ வளர்ப்புத் தொழில் அகில இந்தியக் காதி மற்றும் கிராமத் தொழில் வாரியத்தின் கீழ் இருந்தது. இது 1956-ல் காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையமாக மாற்றப்பட்டது. இது தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டது. 1962-, புனேவில் இந்த ஆணையத்தின் கீழ் மத்திய தேனீ ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் நிறுவப்பட்டது. ஒய்எம்சிஏ மற்றும் பிற கிறித்தவ சேவையமைப்புகளால் கேரளா மற்றும் தமிழ்நாடு பகுதிகளில் ரப்பர் தோட்டங்களில் தேனீ வளர்ப்பு ஊக்குவிக்கப்பட்டது. கர்நாடகாவின் கூர்க் பகுதி மற்றும் மஹாபலீஸ்வர் ஆகியவை பகுதிகள் தேனீ வளர்ப்பில் வளர்ச்சியைக் கண்டன. இராமகிருஷ்ணா இயக்கம் இதை வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் மேற்கு வங்கத்தில் ஊக்குவித்தது. பஞ்சாப் வேளாண்மைப் பல்கலைக்கழகம் தேனீ வளர்ப்பில் ஆராய்ச்சியைத் தொடங்கி, ஏபிசு மெல்லிபெரா தேனீக்களை அறிமுகப்படுத்தி மேம்படுத்தியது.[8]
1990களின் பிற்பகுதியில் இந்தியாவில் தேன் உற்பத்தி கணிசமாக அதிகரித்தது. தேன் உற்பத்தியில் 70% முறைசாரா பிரிவுகளிலிருந்து வருகிறது. தேனின் முக்கிய ஏற்றுமதியாளராக, இந்தியா, சீனா, அர்ஜென்டினா, ஜெர்மனி, ஹங்கேரி, மெக்சிகோ மற்றும் ஸ்பெயினுக்கு பின்னால் உள்ளது. 2005ஆம் ஆண்டில், இந்தியாவின் தேன் ஏற்றுமதி 26.4 மில்லியன் ஐக்கிய நாடுகளின் டாலர் மதிப்பை எட்டியது. இதில் 66% சதவீதம் தென் அமெரிக்க தாராள வர்த்தக உடன்படிக்கை மேற்கொண்ட நாடுகளால் பயன்படுத்தப்பட்டது. 6 மில்லியன் ஐக்கிய நாடுகளின் டாலர் மதிப்புள்ள தேனை ஐரோப்பிய ஒன்றியம் உட்கொண்டது. இதில் ஜெர்மனி 75% ஆக அதிகமாக எடுத்துக் கொண்டது 2005ஆம் ஆண்டில், சவூதி அரேபியா கணிசமான ஐக்கிய நாடுகளின் டாலர் 2.2 மில்லியன் இந்தியத் தேனை இறக்குமதி செய்தது. 1996-ல் இந்தியாவின் ஏற்றுமதி மிகவும் குறைவாக இருந்தது.[9]
தென்னிந்தியாவில் உள்ள தமிழ்நாட்டின் நீலகிரிப் பகுதியில் பல்வேறு பழங்குடியினர் தேன் சேகரிப்பவர்களாக இருப்பதால், கோத்தகிரியைத் தளமாகக் கொண்ட கீசுடோன் அறக்கட்டளை, தேனீ வளர்ப்பு மற்றும் தொழில் நுட்பங்களை மேம்படுத்துவதற்காக 2007ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் ஊட்டி நகரில் தேன் மற்றும் தேனீ அருங்காட்சியகத்தைத் தொடங்கியது.[10][11] இந்த குழு 2015ஆம் ஆண்டு ஊட்டியில் தேன் உணவு நிபுணத்துவம் வாய்ந்த "ஏ பிளேசு டு பீ" (தேனீக்கான இடம்) என்ற உணவகத்தையும் திறந்தது.[10]
வணிக முக்கியத்துவம் வாய்ந்த ஆறு வகையான தேனீக்கள் இந்தியாவில் காணப்படுகின்றன இவை ஏபிசு டார்சாட்டா (மலைத் தேனீ), ஏபிசு லேபரியோசா, ஏபிசு செரானா இண்டிகா (இமயமலை இனங்கள்), ஏபிசு ப்ளோரியா (குள்ளத் தேனீ), ஏபிசு மெல்லிபெரா (ஐரோப்பிய அல்லது இத்தாலியத் தேனீ), மற்றும் டெட்ராகோனுலா இரிடிபென்னிசு (கொசுத் தேனீ). மலைத் தேனீக்கள் ஆக்ரோஷமானவை. இவற்றைத் தேனீ வளர்ப்பில் பராமரிக்க முடியாது. ஆனால் இவற்றின் தேனானது காடுகளில் உள்ள கூடுகளிலிருந்து அறுவடை செய்யப்படுகின்றன. குள்ள தேனீக்களின் தேனும் காடுகளிலிருந்து அறுவடை செய்யப்படுகிறது. ஏனெனில் இவை நாடோடி வாழ்க்கையினை மேற்கொள்வதோடு இவற்றின் தேன் உற்பத்தியும் மிகக் குறைந்த அளவிலே உள்ளது. மிதவெப்ப மண்டலப் பகுதிகளில் அறிமுகப்படுத்தப்பட்ட பூர்வீக ஏபிசு செரானா மற்றும் ஏபிசு மெல்லிபெரா ஆகியவை செயற்கை தேனீ பெட்டிகளில் வளர்ப்பதற்கு மிகவும் ஏற்றது. கொசுத் தேனீக்கள் வளர்க்கப்படலாம் மற்றும் பல்வேறு பயிர்களின் மகரந்தச் சேர்க்கைக்கு முக்கிய காரணிகளாக இவை இருக்கின்றன. ஆனால் இவை குறைந்த அளவிலே தேனை உற்பத்தி செய்கின்றன.[12]
தேனீ | மகசூல் |
---|---|
ஏபிசு டோர்சாட்டா | 36 கிலோகிராம்கள் (79 lb) |
ஏபிசு செரானா இண்டிகா | 6 கிலோகிராம்கள் (13 lb) முதல் 8 கிலோகிராம்கள் (18 lb) |
ஏபிசு புளோரியா | 500 கிராம்கள் (18 oz) |
ஏபிசு மெல்லிபெரா | 25 கிலோகிராம்கள் (55 lb) முதல் 40 கிலோகிராம்கள் (88 lb) |
டெட்ராகோனுலா இரிடிபென்னிஸ் | 100 கிராம்கள் (3.5 oz) |
{{cite book}}
: Check date values in: |year=
(help)