இரத்தன்ஜி தாதாபாய் டாட்டா | |
---|---|
பிறப்பு | 1856 நவ்சாரி, மும்பை மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் (தற்போதைய குசராத்து, இந்தியா) |
இறப்பு | 1926 பாரிஸ், பிரான்சு |
படித்த கல்வி நிறுவனங்கள் | கத்தீட்ரல் & ஜான் கன்னான் பள்ளி |
பணி | தொழிமுனைவோர் |
வாழ்க்கைத் துணை | சூசன்னா பிரையர் |
பிள்ளைகள் | ரோடபே, ஜெகாங்கீர், ஜிம்மி, சில்லா, தோரப் |
இரத்தன்ஜி தாதாபாய் டாட்டா (Ratanji Dadabhoy Tata) ( 1856-1926) ஆர். டி. டாடா என சுருக்கமாக அழைக்கப்பட்ட இவர் ஓர் இந்திய தொழிலதிபர் ஆவார். இவர் இந்தியாவில் டாட்டா குழுமத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தார். இந்தியாவின் முன்னோடி தொழிலதிபரும் டாட்டா சன்ஸ் நிறுவனருமான ஜம்சேத்ஜி டாட்டாவின் முதல் உறவினர் ஆவார். ஜம்சேத்ஜி டாட்டா நிறுவிய டாட்டா சன்ஸ் நிறுவனத்தில் இவரும் ஒருவராக இருந்தார். ஜே.ஆர். டி டாட்டா இவரது மகனாவார்.
இவர் 1856 இல் குசராத்தில் நவ்சாரி நகரத்தில் பிறந்தார்.பின்னர், மும்பையிலுள்ள தி கதீட்ரல் & ஜான் கோனன் பள்ளியிலும், எல்பின்ஸ்டோன் கல்லூரியிலும் படித்தார் . பட்டம் பெற்ற பிறகு, சென்னையில் விவசாயத்தில் ஒரு படிப்பை படித்தார். பின்னர் இவர் தூர கிழக்கில் தனது குடும்ப வர்த்தகத்தில் சேர்ந்தார்.
இவர் தனது சிறு வயதிலேயே ஒரு பார்சி பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இருப்பினும், திருமணத்திற்குப் பிறகு இவரது மனைவி குழந்தை இல்லாமல் இறந்தார். 1902 ஆம் ஆண்டில் சுசான் பிரையர் என்ற பிரெஞ்சு பெண்ணை மறுமணம் செய்து கொண்டபோது இவர் தனது நாற்பதுகளில் இருந்தார். இது இவரது காலத்தில் புரட்சிகரமாகக் கருதப்பட்டது. இதை பார்சி சமூகத்தில் சிலரால் வரவேற்கப்படவில்லை. வர்களுக்கு ரோடபே, ( ஜஹாங்கீர் ), ஜிம்மி, சில்லா மற்றும் தோராப் என்ற ஐந்து குழந்தைகள் இருந்தனர்.
டாடா அண்ட் கோ என்ற பெயரில், இவர் சீனாவில் அபின் இறக்குமதி வணிகத்தை நடத்தி வந்தார். அது அந்த நேரத்தில் சட்டப்பூர்வமானதாக இருந்தது.[1] 1887 ஆம் ஆண்டில், இவரும் டேவிட் சசூன் போன்ற பிற வணிகர்களும் தங்கள் வர்த்தகத்தை பாதிக்கும் என்று அச்சுறுத்திய ஒரு ஹாங்காங் சட்டமன்ற சபை மசோதா குறித்து புகார் அளிக்க அபினி வர்த்தகர்கள் சார்பாக ஒரு மனுவை முன்வைத்தனர்.[2]
டாடா ஸ்டீல் ஜம்சேத்ஜி டாடாவின் சிந்தனையில் உருவாகி திட்டமிடப்பட்டது. இருப்பினும், இந்த திட்டம் முடிவடைவதற்குள் அவர் இறந்து போனார். அவரது மகன் தோரப்ஜி டாடாவுடன் இணைந்து இத்திட்டத்தை முடிப்பதில் இவர் முக்கிய பங்கு வகித்தார். இதனால் ஜசேத்பூரில் நிறுவப்பட்டது.
டாடாக்கள் முதல் உலகப் போரின்போது ஆங்கிலேயர்களுக்கு எஃகினை வழங்கினர். இருப்பினும், போருக்குப் பின்னர் டாடா ஸ்டீல் 1920 களில் பிரிட்டனிலிருந்தும்,பெல்ஜியத்திலிருந்தும் இந்தியாவுக்கு எஃகு கொண்டுவரப்பட்டத்தால் ஒரு கடினமான காலகட்டத்திற்கு இட்டுச் சென்றது. இவர், மற்ற இயக்குநர்களுடன் சேர்ந்து இந்திய எஃகு தொழிலுக்கு வெற்றிகரமாக அன்றைய காலனித்துவ அரசாங்கத்திடமிருந்து பாதுகாப்பை நாடி, டாடா ஸ்டீலின் செயல்பாடுகளை சீராக வைத்திருந்தார்.