மாண்புமிகு இரவிசங்கர் சுக்லா | |
---|---|
![]() | |
மத்தியப் பிரதேசத்தின் முதலாவது முதலமைச்சர் | |
பதவியில் 1 நவம்பர் 1956 – 31 திசம்பர் 1956 | |
ஆளுநர் | போகராஜூ பட்டாபி சீத்தாராமையா |
முன்னையவர் | பதவி உருவாக்கப்பட்டது |
பின்னவர் | பகவந்த்ராவ் மாண்ட்லோலி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சாகர், சாகர் மாவட்டம், மத்திய மாகாணம், பிரித்தானிய இந்தியா, பிரித்தானிய இந்தியா (தற்போதைய மத்தியப் பிரதேசம், இந்தியா | 2 ஆகத்து 1877
இறப்பு | 31 திசம்பர் 1956 புது தில்லி, இந்தியா | (அகவை 79)
தேசியம் | இந்தியர் ![]() |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | பவானி தேவி சுக்லா |
பிள்ளைகள் | 6 |
பணி |
|
இரவிசங்கர் சுக்லா (Ravishankar Shukla) (2 ஆகஸ்ட் 1877 - 31 திசம்பர் 1956 [1] ) இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராகவும், இந்திய விடுதலை இயக்க ஆர்வலரும் ஆவார். இவர், 1946 ஏப்ரல் 27 முதல் 1950 ஜனவரி 25 வரை மத்திய மாகாணங்களின் பிரதமராகவும், நவம்பர் 1, 1956 முதல் டிசம்பர் 31, 1956 வரை அவர் இறக்கும் வரை மறுசீரமைக்கப்பட்ட மத்திய பிரதேச மாநிலத்த்தின் முதல் முதலமைச்சராகவும் இருந்தார். இவர் இப்போது சத்தீசுகர் மாநிலத்தின் ஒரு பகுதியாக இருக்கும் மத்திய பிரதேசத்தின் சராய்பாலியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பண்டிட் ரவிசங்கர் சுக்லா 1877 ஆகஸ்ட் 2 ஆம் தேதி பிரித்தானிய இந்தியாவின் மத்திய மாகாணங்களில் உள்ள சாகர் என்ற இடத்தில் பண்டிட் ஜகநாத் சுக்லா (1854-1924) - துளசி தேவி (1856-1941) ஆகியோருக்குப் பிறந்தார்.