இரியூபன் டேவிட்

இரியூபன் டேவிட் (Reuben David) இந்தியாவைச் சேர்ந்த ஒரு விலங்கியல் நிபுணர் ஆவார். 1912 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதியன்று அகமதாபாத்தில் இருந்த ஒரு பெனே இசுரேல் யூத குடும்பத்தில் இரியூபன் டேவிட் பிறந்தார்.[1] இந்தியாவின் குசராத்து மாநிலம் அகமதாபாத்தில் உள்ள காங்கரியா உயிரியல் பூங்காவை நிறுவினார்.[2][3] கால்நடை மருத்துவர் தொழிலை சுயமாகக் கற்றுக் கொண்ட இவர் 1951 ஆம் ஆண்டு அகமதாபாத் நகராட்சி ஆணையத்தினால் நகரத்தில் ஓர் உயிரியல் பூங்காவை உருவாக்க அழைக்கப்பட்டார்.[4]

1975 ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கம் இரியூபன் டேவிட்டுக்கு பத்ம சிறீ விருது வழங்கி கௌரவித்தது.[5] எழுத்தாளர் எசுதர் டேவிட் இவரது மகள் ஆவார்.

1989 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 24 ஆம் தேதியன்று இரியூபன் டேவிட் காலமானார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Reuben David (1912 -1989) - Esther David" (in en-US). Esther David. http://estherdavid.com/reuben-david/. 
  2. "Ahmedabad zoo architect Reuben David remembered on 100th birth anniversary". indianexpress.com.
  3. Thomas, Amelia (11 January 2008). The Zoo on the Road to Nablus. ISBN 9781586486587. {{cite book}}: |work= ignored (help)
  4. "Animal instinct". intoday.in.
  5. "AMC to mark 100th birth anniversary of zoologist Reuben David today". Indian Express. Retrieved 2014-02-24.