ஈ. சரவணபவன் E. Saravanapavan | |
---|---|
இலங்கை நாடாளுமன்றம் for யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம் | |
பதவியில் 2010–2020 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | திசம்பர் 15, 1953 |
அரசியல் கட்சி | இலங்கைத் தமிழரசுக் கட்சி |
பிற அரசியல் தொடர்புகள் | தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு |
வாழிடம்(s) | 70 டேவிட்சன் வீதி, பம்பலப்பிட்டி, இலங்கை |
வேலை | வெளியீட்டாளர், தொழிலதிபர் |
இனம் | இலங்கைத் தமிழர் |
ஈசுவரபாதம் சரவணபவன் (Eswarapatham Saravanapavan, பிறப்பு: 15 டிசம்பர் 1953) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும், பத்திரிகை வெளியீட்டாளரும் ஆவார். சரவணபவன் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் மற்றும் சுடரொளி பத்திரிகைகளின் நிருவாகப் பணிப்பாளர் ஆவார்.[1]
சரவணபவன் 2010 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[2]