எமி பாவா Hemi Bawa | |
---|---|
பிறப்பு | தில்லி, இந்தியா |
பணி | ஓவியர் சிற்பி |
அறியப்படுவது | நவீன ஓவியம் |
வாழ்க்கைத் துணை | இந்திரசித்து சிங் பாவா |
விருதுகள் | பத்மசிறீ |
வலைத்தளம் | |
Website |
எமி பாவா (Hemi Bawa) இந்தியாவைச் சேர்ந்த ஓர் ஓவியரும் சிற்பியுமாவார். 1948 ஆம் ஆண்டு [1] இவர் பிறந்தார். இவரது படைப்புகளில் அக்ரைலிக்கு மற்றும் கண்ணாடி ஓவியங்களும் மற்றும் வார்ப்பிரும்பு, கண்ணாடி இழை மற்றும் தாமிரம் ஆகியவற்றால் செய்யப்பட்ட சிற்பங்களும் அடங்கும். [2]
பாவா தில்லியில் பிறந்தார், 1962 ஆம் ஆண்டில் ஓவியம் வரையத் தொடங்கியபோது இவருக்கு முறையான பயிற்சி எதுவும் இல்லை [3] பின்னர், இவர் இசுகாண்டிநேவிய கண்ணாடி தயாரிக்கும் நுட்பங்களைப் படித்தார். பின்னர் அந்த ஊடகத்தில் உலோகம், மரம் மற்றும் அக்ரைலிக்கு ஆகியவற்றுடன் இணைந்து பணியாற்றத் தொடங்கினார். [4] 1996 ஆம் ஆண்டில், அட்லாண்டாவில் நடைபெற்ற 1996 ஆம் ஆண்டு கோடைகால ஒலிம்பிக்கில் காட்சிப்படுத்துவதற்காக, கோகோ-கோலா ஒரு சிற்பத்தை உருவாக்க இவரை நியமித்தது, எட்டு அடி உயரத்தில் இவர் உருவாக்கிய சிற்பம் இப்போது நகரத்தில் உள்ள கோகோ-கோலா அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. [2] [5] இந்தியாவிலும் வெளிநாட்டிலும் தனி மற்றும் குழு கண்காட்சிகளை பாவா நடத்தியுள்ளார். இதில் கண்ணாடி பரிமாண நிகழ்ச்சி [6] மற்றும் தில்லியில் இந்தியா கலைத் திருவிழா 2012 ஆகியவை அடங்கும். [7]
கலைத்துறையில் எமி பாவா ஆற்றிய பங்களிப்புகளுக்காக இந்திய அரசு 2009 ஆம் ஆண்டு பத்மசிறீ விருதை இவருக்கு வழங்கியது. [8] 2010 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அல்கா பாண்டே எழுதிய எமி பாவா என்ற புத்தகத்தில் இவரது வாழ்க்கை மற்றும் படைப்புகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன [9] இந்தர்சித்து சிங் பாவா என்ற தொழிலதிபரைத் திருமணம் செய்து கொண்டார், மேலும் இத்தம்பதியினர் தற்போது தில்லியில் எய்லி சாலையில் வசிக்கின்றனர். [10]