வகை | சுயநிதி |
---|---|
உருவாக்கம் | 1992 |
முதல்வர் | லலிதா பாலகிருஷ்ணன் |
மாணவர்கள் | 3000 |
அமைவிடம் | , , 13°3′19″N 80°15′1″E / 13.05528°N 80.25028°E |
சேர்ப்பு | சென்னைப் பல்கலைக்கழகம் |
இணையதளம் | http://mopvc.edu.in/ |
எம். ஓ. பி வைணவ மகளிர் கல்லூரி (M.O.P. Vaishnav College for Women) என்பது தமிழ்நாட்டின், சென்னையில் அமைந்துள்ள ஒரு கலை அறிவியல் கல்லூரி ஆகும். இது சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது. [1]
சிறீ வல்லபச்சார்யா வித்யா சபாவானது திவான் பகதூர் எம். ஓ. பார்த்தசாரதி ஐயங்கார் தொண்டு நிறுவனங்களின் ஒத்துழைப்போடு 1992-ல் எம். ஓ. பி வைணவ மகளிர் கல்லூரி நிறுவப்பட்டது. எம்.ஓ.பி. அறக்கட்டளைகள் கல்லூரி வளாகத்திற்காக நிலத்தை நன்கொடையாக அளித்தன. உள்கட்டமைப்பு வசதி மற்றும் நிர்வாகத்தை சிறீ வல்லபாச்சார்யா வித்யா சபா மேற்கொள்கிறது. [2] 2002 ஆம் ஆண்டில், இக்கல்லூரி தேசிய மதிப்பீட்டு மற்றும் அங்கீகார கவுன்சிலில் (என்ஏஏசி) நான்கு நட்சத்திரங்களுடன் அங்கீகாரம் பெற்றது, அதே ஆண்டில் சென்னைப் பல்கலைக்கழகத்தால் நிரந்தர இணைவு வழங்கப்பட்டது. இது 2004 இல் யுஜிசி மற்றும் சென்னைப் பல்கலைக்கழகத்தால் சுயாட்சி வழங்கப்பட்டது. [3]
இந்த கல்லூரியில் 15 இளங்கலை மற்றும் ஆறு முதுகலை படிப்புகள் உள்ளன. மேலும் முனைவர் பட்ட பாடத்திட்டங்களைநும் கொண்டுள்ளது. [4] இங்கு வழங்கப்படும் படிப்புகள் பின்வருமாறு [5]
எம்ஓபி வைணவ கல்லூரி தங்கள் மாணவர்களுக்கு பாடத்திட்டத்தைத் தாண்டிய பல்வேறு வசதிகளை வழங்குகிறது. கல்லூரியில் பல சங்கங்கள், பட்டறைகள், கருத்தரங்குகள், கலாச்சார நடவடிக்கைகள், ஆராய்ச்சி மற்றும் பத்திரிகை வெளியீடுகள் உள்ளன.
சங்கங்கள்
கல்லூரியில் 16 சங்கங்கள் செயல்படுகின்றன [6] மாணவர்களிடம் உள்ள ஒருங்கிணைப்பு, திட்டமிடல், மதிப்பீடு போன்ற பல உள்ளார்ந்த திறமைகளை வெளிப்படுத்தி, அதை மாணவர்களின் வளர்ச்சிக்கு பயன்படுவதே சங்கங்களின் முக்கிய நோக்கமாகும்.
கலாச்சார செயல்பாடுகள்
எம்.ஓ.பி வைணவ மகளிர் கல்லூரியானது மாணவிகளின் போட்டி உணர்வை வெளிப்படுத்தும் வருடாந்திர கலாச்சார கொண்டாட்டங்களை [7] நடத்துகிறது. மாணவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உதவும் முயற்சிகளை வழங்குவதே முக்கிய நோக்கமாக உள்ளது.
{{cite web}}
: |last=
has generic name (help)