எல்.ஏ.கிருட்டிண அய்யர் | |
---|---|
பிறப்பு | கேரளா, இந்தியா |
பணி | மானுடவியலாளர் வரலாற்றாளர் |
அறியப்படுவது | மாணுடவியல் கட்டுரைகள் |
பெற்றோர் | எல்.கே. அனந்தகிருட்டிண அய்யர் |
பிள்ளைகள் | எல்.கே.பாலரத்னம், கங்கா பாகீரதி |
விருதுகள் | பத்ம பூசண் |
லட்சுமிநாராயணபுரம் அனந்தகிருட்டிண கிருட்டிண அய்யர் (Lakshminarayanapuram Ananthakrishna Krishna Iyer) ஓர் இந்திய மானுடவியலாளர் ஆவார். மானுடவியல் குறித்த தலைப்புகளில் பல நூல்களை இவர் எழுதியுள்ளார்[1]. இவர் சென்னை பல்கலைக்கழகத்தின் மானுடவியல் துறையின் தலைவராக இருந்தார், கேரளாவின் பழங்குடி மற்றும் அட்டவணை சாதி மக்கள் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டார். குறிப்பிடத்தக்க மானுடவியலாளரும் இவரது தந்தையுமான எல்.கே. அனந்தகிருட்டிண அய்யர் முன்னெடுத்த ஆய்வுகளின் தொடர்ச்சியே இவரது ஆய்வுகளாகும்[2]. இந்திய மானுடவியல்[3], இரண்டு தொகுதிகளாக எழுதப்பட்ட கேரளாவின் சமூக வரலாறு என்ற வரலாற்று ஆய்வு நூல்கள்[4], மூன்று தொகுதிகளாக எழுதப்பட்ட தென் கேரள பழங்குடிகள் தொடர்பான திருவாங்கூர் பழங்குடிகள் மற்றும் சாதிகள் என்ற நூல் போன்றவை[5] இவர் ஆங்கிலமொழியில் எழுதிய குறிப்பிடத்தக்க சில நூல்களாகும். அறிவியல் பங்களிப்பிற்காக இந்தியாவில் வழங்கப்படும் மூன்றாவது மிகவுயர்ந்த விருதான பத்ம பூசண் விருதை இந்திய அரசாங்கம் 1972 ஆம் ஆண்டு இவருக்கு வழங்கியது[6]. இவரது மகன் எல்.கே.பாலரத்னமும் ஓர் அறியப்பட்ட மானுடவியலாளர் ஆவார்[2]. இவரது மகள் எல்.கே.கங்கா பாகிரதி தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைமைப்பொறியாளர் கே.ஏ.சீத்தாராமனின் மனைவியாவார். சென்னை உள்ளுர் வலையமைப்பின் பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்துறை பிரிவு வழங்கும், பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்துறையில் சிறந்த பங்களிப்புகளுக்கான 2016-2017 ஆம் ஆண்டிற்கான இளம் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றவர் சீத்தாராமன் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
{{cite web}}
: Unknown parameter |=
ignored (help)