ஒல்யா மெலன் Olya Melen | |
---|---|
தேசியம் | உக்ரேனியர் |
பணி | வழக்கறிஞர் |
விருதுகள் | கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருது (2006) |
ஒல்யா மெலன் (Olya Melen) உக்ரைன் நாட்டைச் சேர்ந்த வழக்கறிஞர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆவார்.
தன்யூப் ஆறு-கருங்கடல் கால்வாயின் கட்டுமானத்தை நிறுத்த சட்ட வழிகளைப் பயன்படுத்தி நடவடிக்கை மேற்கொண்டதற்காக 2006 ஆம் ஆண்டில் இவருக்கு கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருது வழங்கப்பட்டது. கருங்கடலின் கடற்கரையில் உள்ள தன்யூப் டெல்டா அனைத்துலக முக்கியத்துவம் பெற்ற ஈரநிலம்" என்றும் "யுனெசுகோ உலக பாரம்பரியத் தளம் என்றும் உயிர்க்கோள பாதுகாப்பிடம்" என்றும் ராம்சாகர் மாநாட்டில் அறிவிக்கப்பட்டது.[1]