ஓம் பிரகாசு ராஜ்பர் | |
---|---|
சுகல்தேவ் பாரதிய சமாச் கட்சி தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 27 அக்டோபர் 2002 | |
முன்னையவர் | தோற்றுவிக்கப்பட்டது |
சட்டப் பேரவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2017–முதல் | |
தொகுதி | ஜஹூராபாத் |
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் உத்தரப்பிரதேசம் | |
பதவியில் 19 மார்ச் 2017 – 20 மே 2019 | |
பின்னவர் | அணில் ராஜ்பர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 15 செப்டம்பர் 1962 வாரணாசி, உத்தரப் பிரதேசம், இந்தியா |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | சுகல்தேவ் பாரதிய சமாச் கட்சி |
பிற அரசியல் தொடர்புகள் | சமாஜ்வாதி கட்சி |
வாழிடம் | ஜஹூராபாத், உத்தரப் பிரதேசம் |
தொழில் | அரசியல்வாதி, விவசாயி[1] |
ஓம் பிரகாசு ராஜ்பர் (Om Prakash Rajbhar)(பிறப்பு 15 செப்டம்பர் 1962) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் சுகல்தேவ் பாரதிய சமாச் கட்சியின் தலைவர் ஆவார். இவர் உத்தரப்பிரதேசத்தின் ஜஹூராபாத் தொகுதியிலிருந்து 17வது சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] இவர் ஏக்தா மன்ச் கூட்டணியின் தலைவர் ஆவர்.
ராஜ்பர், சன்னு ராஜ்பருக்கு மகனாக உத்தரப்பிரதேசத்தில் உள்ள பலியா மாவட்டத்தின் ராஸ்ரா தொகுதியில் உள்ள ராம்பூர் கிராமத்தில் பிறந்தார். இவர் 1983-ல் வாரணாசியில் உள்ள படகானில் உள்ள பல்தேவ் பட்டப்படிப்புக் கல்லூரியில் பட்டம் பெற்றார். இவர் விவசாய தொழிலில் செய்பவர் ஆவார்.[1]
ராஜ்பர் உத்தரப்பிரதேசத்தின் 17வது சட்டமன்ற உறுப்பினர் ஆவார். 2017 முதல், இவர் ஜஹூராபாத் சட்டமன்ற உறுப்பினராகச் செயல்பட்டு வருகிறார்[1]
ராஜ்பார், 19 மார்ச் 2017 அன்று, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுத் துறை அமைச்சராக யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் பதவியேற்றார்.
ஆனால் மே 20, 2019 அன்று, கூட்டணிக்கு எதிரான நடவடிக்கைகள் காரணமாக யோகி ஆதித்யநாத்தின் அமைச்சரவையிலிருந்து ராஜ்பார் நீக்கப்பட்டார்.[3][4]
தி வயர் பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியில், தான் ஒரு இந்து அல்ல என்று தெரிவித்தார்.[5]
# | இருந்து | செய்ய | பதவி |
---|---|---|---|
1 | 2017 | 2019 | பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் |
2 | 2017 | பதவியில் | உத்திரபிரதேசத்தின் 17வது சட்டமன்ற உறுப்பினர் |