செங்கை ஆழியான் | |
---|---|
பிறப்பு | க. குணராசா சனவரி 25, 1941 வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம் |
இறப்பு | பெப்ரவரி 28, 2016 நீராவியடி, யாழ்ப்பாணம் | (அகவை 75)
இறப்பிற்கான காரணம் | இயற்கை |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
மற்ற பெயர்கள் | சென்கை ஆழியான் |
கல்வி | யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, பேராதனைப் பல்கலைக்கழககம் |
பணி | உதவி அரச அதிபர் |
அறியப்படுவது | ஈழத்து எழுத்தாளர் |
சமயம் | இந்து |
பெற்றோர் | கந்தையா, அன்னம்மா |
வாழ்க்கைத் துணை | கமலாம்பிகை |
பிள்ளைகள் | ரேணுகா, பிரியா, ஹம்சா |
செங்கை ஆழியான் என்ற புனைபெயரால் பரவலாக அறியப்படும் க. குணராசா (சனவரி 25, 1941 - 28 பெப்ரவரி 2016) மிகப்பெருமளவு நூல்களை வெளியிட்ட ஈழத்து எழுத்தாளராவார். புதினங்கள், சிறுகதைகள், புவியியல் நூல்கள், வரலாற்று ஆய்வுகள், தொகுப்பு முயற்சிகள் மற்றும் பதிப்புத்துறை எனப் பல துறைகளிலும் க. குணராசாவின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும்.நீலவண்ணன் என்ற பெயரிலும் ஆக்கங்கள் வரைந்தார்.
இவர் கந்தையா அன்னம்மா தம்பதிகளின் எட்டாவது குழந்தையாக வண்ணார்பண்ணையில் பிறந்தார். யாழ். இந்து ஆரம்ப பாடசாலையில் ஆரம்பக் கல்வியையும் இடைநிலைக் கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் உயர் கல்வியைப் பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் கற்றார். இவர் 28.02.2016 இல் தனது 75 வது வயதில் இயற்கையெய்தினார்
https://noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE,_%E0%AE%95[தொடர்பிழந்த இணைப்பு].
ஈழநாடு பத்திரிகையில் வெளிவந்த 'கிடுகு வேலி' என்ற இவரது தொடர்கதை வாசகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
இவர் எழுதிய 'வாடைக் காற்று' புதினம் திரைப்படமாக தயாரிக்கப்பட்டு, தரமான படைப்பு எனப் பேசப்பட்டது.
படைப்புக்கள்