க. செ. கேசவப்பிள்ளை | |
---|---|
பிறப்பு | பரவூர், கேரளம், இந்தியா | பெப்ரவரி 4, 1868
இறப்பு | செப்டம்பர் 2, 1914[1] கேரளம் ,இந்தியா | (அகவை 46)
தொழில் | ஆசிரியர், கவிஞர், இசையமைப்பாளர் |
தேசியம் | இந்தியன் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் |
|
துணைவர் | கல்யாணி அம்மா நாநிக்குட்டி அம்மா |
குடும்பத்தினர் | வளிய வெளிச்சத்து வீட்டில் ராமன் பிள்ளை (தந்தை) தேசத்து லட்சுமி அம்மா (தாய்) ஆர். நாராயண பனிக்கர் |
கனக்கு செம்பகராமன் கேசவப்பிள்ளை (Kanakku Chembakaraman Kesava Pillai) (1868-1914) இவர், கர்நாடக இசையின் இந்திய இசையமைப்பாளரும் மலையாள இலக்கியக் கவிஞரும் ஆவார். இவர் திருவிதாங்கூர் அரசவைக் கவிஞராகவும் இருந்திருக்கிறார். மலையாள மகாகாவியமான கேசவீயம், இரண்டு ஆட்டகதைகள் (கூத்து), பல பஜனைகள், கீர்த்தனைகள் போன்றவற்றிற்காக அறியப்படுகிறார். நாராயணியம் என்ற சமசுகிருத நூலை மலையாளத்தில் "பாசாநாராயணியம்" என்ற தலைப்பில் மொழிபெயர்த்துள்ளார்.[2][3][4]