கத்னி குண்டு தடுப்பணை | |
---|---|
நாடு | இந்தியா |
அமைவிடம் | யமுனா நகர் மாவட்டம் |
புவியியல் ஆள்கூற்று | 30°18′50″N 77°35′04″E / 30.31389°N 77.58444°E |
கட்டத் தொடங்கியது | 1996 |
திறந்தது | 1999 |
கட்ட ஆன செலவு | ரூபாய் 168 கோடி |
உரிமையாளர்(கள்) | அரியான நீர்பாசனத் துறை |
அணையும் வழிகாலும் | |
நீளம் | 360 m (1,181 அடி) |
வழிகால் வகை | 10 வெள்ளப்பாய்வு கதவு, 8 மதகுகள் |
வழிகால் அளவு | 28,200 m3/s (995,874 cu ft/s) |
கத்னி குண்டு தடுப்பணை (Hathni Kund Barrage) என்பது இந்தியாவின் ஹரியானா மாநிலத்தின் யமுனா நகர் மாவட்டத்தில் யமுனா ஆற்றில் அமைந்துள்ள கான்கிரீட் தடுப்பணை ஆகும். இது நீர்ப்பாசன நோக்கத்திற்காக அக்டோபர் 1996 முதல் ஜூன் 1999 வரை கட்டப்பட்டது. இந்த அணையின் கீழ்ப்பகுதியில் பயனற்ற நிலையில் காணப்படும் தாஜேவாலா தடுப்பணைக்கு மாற்றாகக் கட்டப்ப்டட்டது. கத்னி குண்டு தடுப்பணையிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கீழணை 1873ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. கத்னி தடுப்பணை தண்ணீரை மேற்கு மற்றும் கிழக்கு யமுனா கால்வாய்களில் திருப்பிவிடுகிறது. மேலும் சிறிய நீர்த்தேக்கமும் உருவாகியுள்ளது. இந்த நீர்பிடிப்பு பகுதியில் உள்ள ஈரநிலத்தில் 31 வகையான பறவைகள் காணப்படுகின்றன.[1]
1970களின் முற்பகுதியிலிருந்து தாஜேவாலா தடுப்பணையை மாற்றுவதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டு வந்தன, ஆனால் அரியானா மற்றும் இமாச்சல பிரதேச அரசாங்கங்களுக்கிடையில் ஒப்பந்தம் ஒன்று ஜூலை 1994 வரை ஏற்படவில்லை. 1999ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அணையின் வேலைகள் முடிக்கப்பட்டாலும், ஒரு சில வேலை தாமதங்கள் காரணமாக மார்ச் 2002 வரை அணைச் செயல்படவில்லை.[2] இந்த அணை 360 மீ. நீளமானது. இதன் நீர் கசிவு பாதை பத்து முக்கிய வெள்ள வடி வாயில்களால் ஆனது. இதன் வலது பக்கத்தில் ஐந்து நீரடிகசிவு பகுதியும் இடதுபுறத்தில் மூன்றும் அதிகபட்சமாக 28,200 m3/s (995,874 cu ft/s) நீரை வெளியேற்றும் தன்மையுடையது.[3]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)